பூசனிக்காய் சாப்பிடலாமா?
உயிரினங்களில் தான் சில வகையான உயிரினங்கள் ஹராமாக ஆக்கப்பட்டுள்ளன. தாவர இனத்தில் எந்த ஒன்றும் மார்க்கத்தில் ஹராமாக்கப்படவில்லை.
அனைத்து பொருட்களும் பொதுவான ஒரு நிபந்தனை அடிப்படையில் தான் மனிதர்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. நமது உயிருக்கோ உடல் நலத்துக்கோ கேடு செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.
பார்க்க திருக்குர்ஆன் 4:29
பூசணிக்காயோ இன்ன பிற காய் கனிகளோ மனிதனுக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிய வந்தால் அதைச் சாப்பிடக் கூடாது. அவ்வாறு இல்லாவிட்டால் எந்த காய்களையும் கனிகளையும் கீரை வகைகளையும் சாப்பிடலாம். மார்க்கத்தில் தடை இல்லை.