உணவு உண்ணும் முறைகள் பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?
அதன் தொடர்ச்சியாக 15 ஜூன், 2004 அதிகாலை இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷாய்க் என்னும் பிரணேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோஹர் ஆகிய நான்கு பேரின் சடலங்கள் அகமதாபாத் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டன.
மோடியைக் கொல்வதற்காக வந்த தீவிரவாதிகள்தான் இவர்கள். இவர்களைத் தடுத்து நிறுத்தும் போது ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று ஐ.ஜி. வன்சாரா தெரிவித்தார்.
ஆனால் காவல்துறையின் வாதத்தைத் தடயவியல் ஆய்வுகளும், மருத்துவப் பரிசோதனைகளும் நிராகரித்துவிட்டன. அரை மணி நேரத்துக்கு மேல் மோதல் நடைபெற்றதாகச் சொல்லப்பட்ட அந்த நெடுஞ்சாலையில் அப்படி ஒரு போராட்டம் நடைபெற்றதற்கான எந்த ஒரு சுவடும் காணப்படவில்லை. நான்கு பேர் கொல்லப்பட்ட பிறகும் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை, சாட்சியங்களைப் பதிவு செய்யவில்லை. வழக்கு விசாரணையையும் ஆரம்பிக்கவில்லை.
இந்த அசாதாரணமான செயல் (அல்லது செயலற்ற தன்மை) இயல்பாகவே பல சந்தேகங்களை நாடு முழுக்கக் கிளப்பிவிட்டது.
பல போராட்டங்களுக்குப் பிறகு விசாரணை ஆரம்பமானது. 2009ஆம் ஆண்டு முதன்முறையாக அகமதாபாத் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த அறிக்கை, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரும் 12 ஜூன் 2004 அன்று கடத்தி வரப்பட்டு, காவல்துறைக் கண்காணிப்பில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இரண்டு தினங்கள் கழித்தே சடலங்கள் நெடுஞ்சாலைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தது. வன்சாரா தொடங்கி 22 காவல் துறையினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை சிபாரிசு செய்தது.