Search Posts

——————

அல்முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு இவ்விரு அர்த்தங்கள் தவிர வேறு அர்த்தமும் உள்ளது. அத்தகைய இடங்களில் இவ்விரு அர்த்தங்களும் பொருந்தாமல் போய் விடும்.

முஹ்ஸனாத் பெண்கள் மீது யார் அவதூறு கூறுகிறார்களோ… என்று திருக்குர்ஆன் 24:4, 24:23 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.

“திருமணமான பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ” என்று இங்கே அர்த்தம் கொள்ள முடியாது. அவ்வாறு அர்த்தம் கொண்டால் திருமணமாகாத பெண்கள் மீது அவதூறு கூறலாமா என்ற கேள்வி பிறக்கும்.

“திருமணம் ஆகாத பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ” என்றும் பொருள் கொள்ள முடியாது. இவ்வாறு பொருள் கொண்டால் திருமணம் ஆனவர்கள் மீது அவதூறு கூறலாமா என்ற கேள்வி பிறக்கும்.

“கற்பொழுக்கத்தைப் பேணுபவர்கள்” என்பதுதான் இங்கே பொருள். இவ்வார்த்தைக்கு இந்தப் பொருளும் உள்ளது. கற்பு நெறியுடன் வாழும் பெண்கள் மீது அவதூறு கூறுவோர் மேற்கண்ட இரு வசனங்களில் எச்சரிக்கப்படுகின்றனர்.

“முஹ்ஸனாத் பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதித் தண்டனை அடிமைப்பெண்களுக்கு உண்டு” என்ற 4:25 வசனத்தில் இடம் பெறும் முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு கணவனுள்ள பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று பொருள் கொள்வதா? கணவனில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று பொருள் கொள்வதா?

இரு விதமாகவும் பொருள் கொள்ள வாசக அமைப்பு இடம் தருகிறது என்றாலும் இந்த இடத்தில் கணவன் இல்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அதற்கு நியாயமான காரணமும் இருக்கின்றது.

அல்முஹ்ஸனாத் என்ற சொல் இதற்கு முந்தைய வசனத்தில் கணவன் உள்ள பெண்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதை முன்னர் சுட்டிக் காட்டியுள்ளோம்.

முந்தைய வசனத்தில் மட்டுமின்றி இதே வசனத்தின் துவக்கத்திலும் அல்முஹ்ஸனாத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இவ்வசனத்தில் (4:25) இரண்டு இடங்களில் அல்முஹ்ஸனாத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“உங்களில் யாருக்கு முஹ்ஸனாத்களை மணந்து கொள்ள சக்தியில்லையோ”

“முஹ்ஸனாத் பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி”

ஆகியவையே அந்த இரு இடங்கள்.

முதலில் இடம் பெற்ற அல்முஹ்ஸனாத் என்பதற்கு “கணவனுள்ள பெண்களை மணமுடிக்க யாருக்குச் சக்தியில்லையோ” என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் கணவனுள்ள பெண்களை மணந்து கொள்வது அறவே கூடாது. எனவே “கணவனில்லாத பெண்களை மணக்க யாருக்குச் சக்தியில்லையோ” என்று தான் பொருள் கொள்ள முடியும்.

எனவே இதற்கு முந்திய வசனத்தில் முஹ்ஸனாத் என்பது கணவனுள்ள பெண்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் இவ்வசனத்தின் துவக்கத்தில் கணவனில்லாத பெண்களைக் குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, இவ்வசனத்தில் இரண்டாவது தடவையாகப் பயன்படுத்தப்பட்டுள்ள அல்முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு இதே வசனத்தில் இதற்கு முன் பயன்படுத்தப்பட்ட அல்முஹ்ஸனாத்துக்குரிய பொருளைத்தான் கொடுக்க வேண்டும்.

முந்தைய வசனத்தில் அல்முஹ்ஸனாத் என்ற சொல் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விட இவ்வசனத்தில் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்வதே சரியானது.

எனவே முஹ்ஸனாத்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்ற இடத்தில் “திருமணம் ஆன பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி” என்று பொருள் கொள்வதை விட “திருமணம் ஆகாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி” என்று பொருள் கொள்வதே சரியாகும்.

இவ்வாறு சரியாகப் பொருள் கொண்டால் இவர்கள் எடுத்து வைத்த வாதம் அடியோடு வீழ்ந்து விடுகிறது. ஏனெனில், திருமணம் ஆகாத பெண்கள் விபச்சாரம் செய்யும்போது அவர்களுக்குரிய தண்டனை நூறு கசையடிகள்தான். அதில் பாதி ஐம்பது கசையடிகளாகும்.

கணவனுள்ள பெண்கள், கணவன் இல்லாத பெண்கள் என்று முரண்பட்ட இரண்டு அர்த்தங்கள் தரும் இவ்வார்த்தைக்கு இரண்டாவது அர்த்தம்தான் இவ்வசனத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

விபச்சாரத்திற்குரிய தண்டனையில் பாதி எனக் கூறாமல் “முஹ்ஸனாத்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி” என்று அல்லாஹ் கூறுகிறான்.

முஹ்ஸனாத்களுக்கு ஒரு தண்டனை, முஹ்ஸனாத் அல்லாதவர்களுக்கு ஒரு தண்டனை என இரண்டு வகையான தண்டனை இருந்தால் மட்டுமே இவ்வாறு கூற முடியும்.

இரு வகையான தண்டனை இல்லாமல் அனைவருக்கும் ஒரு தண்டனைதான் என்றிருந்தால் முஹ்ஸனாத்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி எனக் கூறாமல் விபச்சாரத்தின் தண்டனையில் பாதி என்று இறைவன் கூறியிருப்பான்.

இதிலிருந்து விபச்சாரத்துக்கு இரு வகையான தண்டனைகள் இருப்பதைச் சந்தேகமற நாம் அறிந்து கொள்கிறோம்.

இந்த நிலையில் முஹ்ஸனாத்களின் தண்டனையில் பாதி எனக் கூறப்பட்டால் எது பாதியாக ஆக முடியுமோ அது பற்றியே கூறப்படுகிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். எது பாதியாக ஆகாதோ அது பற்றிக் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

எனவே, முஹ்ஸனாத் என்பதற்கு இவ்விடத்தில் திருமணமாகாத பெண்களின் தண்டனையில் பாதி என்றுதான் பொருள் கொள்ள முடியும். திருமணமான பெண்களுக்கு வேறு தண்டனை உள்ளது என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

அதைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரண தண்டனை என விளக்கியுள்ளார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு வகையான தண்டனைகள் என்று வகுத்திருப்பது இவ்வசனத்திற்கு (4:25) விளக்கம்தானே தவிர, முரண் இல்லை என்பதை ஐயமற அறியலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்…

 

பெற்றோர்கள் சம்பந்தமாக நபிமொழிகளின் தொகுப்பு

وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ (15)

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது “என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறுகிறான்.

(அல்குர்ஆன் 46 : 15 )

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ” நான் நபி (ஸல்) அவர்களிடம் ” அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?” என்று கூறினார்கள். ”அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே என்று கேட்டேன். அதற்கு ”தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள். ”அடுத்தது எது? அல்லாஹ்வின் நபியே” என்று கேட்டபோது, ”அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்றார்கள்.

நூல் : முஸ்லிம் (138)

உலக மக்களிலேயே அழகிய முறையில் நட்பு கொள்வதற்கு முதல் தகுதியானவர்கள் பெற்றோர்கள்தான்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ” நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ”உன் தாய் என்றார்கள்”. அவர் ”பிறகு யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ”உன் தாய்” என்றார்கள். அவர், ”பிறகு யார்?” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ”பிறகு, உன் தந்தை ” என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (5971)

பெற்றோருக்கு பணிவிடை செய்தல் மாபெரும் ஜிஹாத் ஆகும்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ”உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ”ஆம் (உயிருடனிருக்கின்றனர்)” என்று பதிலளித்தார்.  நபி (ஸல்) அவர்கள் ”அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடைசெய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் : புகாரி (3004)

பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது