Search Posts

Category: 12-தூங்கும் வேளையில்

u312

ஓத வேண்டிய துஆக்கள்

ஓத வேண்டிய துஆக்கள் “நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3275   மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும். “எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 5009   மேலும் படுக்கைக்குச் செல்லும் போது, திருக்குர்ஆனின் […]

உளுச் செய்ய வேண்டும்

  உளுச் செய்ய வேண்டும் படுக்கைக்குச் செல்லும் முன் தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும். பராஃ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள். நூல்: புகாரி 247   இது நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுங்கு முறையாகும். ஆனால் இன்று பலர் இதைக் கடைப்பிடிப்பதில்லை. உளூச் செய்து விட்டு உறங்குவதற்கும், உளூச் செய்யாமல் உறங்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நபியவர்கள் காட்டித் தந்தபடி உளூச் செய்து விட்டு படுத்தால் புத்துணர்ச்சியுடன் கூடிய […]

முன்னுரை

தூங்கும் முன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்     விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே செல்கின்ற இன்றைய காலகட்டத்தில் மனிதன் இயந்திரமாக மாறி விட்டான். காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை மனித வாழ்க்கை இயந்திரமாகவே செல்கின்றது. எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் மனிதனிடம் அவசரம் தான் உள்ளது. நிதானம் என்பது இல்லை. முஸ்லிம்களாக இருந்தால் அந்தக் காரியத்தை இஸ்லாம் எவ்வாறு செய்யச் சொல்கின்றது என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. சிலருக்குத் தெரிந்தாலும் அதைச் சரியான முறையில் செய்வதில்லை. ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து மரணிக்கின்ற வரை அவன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை தன்னுடைய ஒவ்வொரு செயலையும் எப்படிச் […]