Search Posts

Category: 19-குழந்தை வளர்ப்பு

q126

தஸ்தகீர் என்ற பெயருக்கு என்ன பொருள்?

தஸ்தகீர் என்பது பார்ஸி மொழி சொல்லாகும். தஸ்த் என்றால் கை கீர் என்றால் பிடிப்பவர் என்று பொருள். தஸ்தகீர் என்றால் கை பிடிப்பவர் அதாவது பிறருக்கு கை கொடுத்து உதவி செய்பவர் என்று பொருளாகும். இந்தப் பொருளில் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமான எந்த அம்சமும் இல்லை என்பதால் இந்தப் பெயர் வைப்பதில் எந்த தடையும் இல்லை. முஸ்லிம்களின் பெயர் அரபி மொழியில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை., நபியவர்கள் தனது மகனுக்கு இப்றாஹீம் என்று பெயரிட்டிருந்தார்கள். இப்றாஹீம் என்பது அரபி மொழி அல்ல. (பார்க்க புகாரி 1043) அதே வேளை மக்களால் அவ்லியா எனக் கருதப்படும் அப்துல் காதிர் ஜீலானி என்பவருக்கு தஸ்தகீர் என்ற பட்டப் […]

விபச்சாரத்தில் பிறந்த குழந்தையின் நிலை என்ன?

ஒருவரின் பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். யார் என்ன செயல் புரிகிறார்களோ அந்தச் செயல்களுக்கு அவர்களே பொறுப்பாளிகளாவர். ஒருவர் செய்த நன்மை பிறருக்கு வழங்கப்படாததைப் போன்று ஒருவர் செய்த தீமை மற்றவர் மீது சுமத்தப்படாது. ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” அல்குா்ஆன் 53 38 39 பெற்றோர்கள் விபச்சாரம் எனும் தவறான உறவில் ஈடுபட்டால் அவர்கள் தான் குற்றத்திற்குரியவர்கள். இஸ்லாமிய ஆட்சி இருந்திருந்தால் தண்டனைக்குரியவர்கள். அல்லாஹ் மன்னிக்காவிட்டால் மறுமையிலும் தண்டனைக்கு உரியவர்களாவர். தகாத உறவில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கும் இந்தப் பாவத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கள் செய்த பாவத்தில் […]

அகீகாவுக்குப் பதிலாக தர்மம் செய்யலாமா?

நம்முடைய வணக்க வழிபாடுகளை மார்க்கம் கற்றுக் கொடுத்தவாறு அமைத்துக் கொண்டால் தான் அந்த வணக்கத்தை இறைவன் ஏற்றுக் கொள்வான். அதற்குரிய நன்மையையும் கொடுப்பான். இறைவன் குழந்தையைத் தந்ததற்காக அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆட்டை அறுத்துப் பலியிடுவதுதான் அகீகாவாகும். இறைவனுக்காக ஆட்டைப் பலிகொடுத்தால் தான் இந்த வணக்கத்தை நாம் செய்தவராக முடியும். இறைவனுக்காக பிராணியை அறுப்பதும் வணக்கமாகும். தர்மம் செய்வதும் வணக்கமாகும். அகீகாவில் இந்த இரண்டு வணக்கங்களும் அடங்கியுள்ளது. இந்த இரண்டு அம்சங்களையும் செய்பவரே அகீகாவை நிறைவேற்றியராவார். ஒருவர் ஆடு வாங்குவதற்குத் தேவையான பணத்தை தர்மம் செய்தால் அகீகாவில் செய்ய வேண்டிய ஒரு அம்சத்தை மட்டுமே நிறைவேற்றுகிறார். பிராணியைப் பலியிடுதல் என்ற அம்சத்தை விட்டு விடுகின்றார். […]

கத்னாவுக்கு விருந்து உண்டா?

நகம் வெட்டுவது, அக்குள் முடிகளைக் களைவது, மர்மஸ்தானத்தின் முடிகளை நீக்குவது, மீசையைக் கத்தரிப்பது போன்ற செயல்களில் ஒன்று தான் கத்னா (விருத்தசேதனம்) செய்வது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 5889 நகம் வெட்டுவதற்கு ஒப்பான ஒன்றாகத்தான் நபியவர்கள் கத்னா செய்வதைக் குறிப்பிட்டுள்ளார்கள். நகம் வெட்டுவதற்கோ அக்குள் முடிகளைக் களைவதற்கோ மீசையைக் கத்தரிப்பதற்கோ யாரும் எந்த விருந்தும் வைப்பது கிடையாது. அது […]

ஷாஜஹான் என்று பெயர் வைக்கலாமா?

இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளைக் குறிக்கும் பெயர்களை மனிதர்களுக்குச் சூட்டக்கூடாது. அவ்வாறு சூட்டினால் இணைவைப்பு என்ற பெரும்பாவத்தில் விழ வேண்டி வரும் . பின்வரும் ஹதீஸ்கள் இதைத் தடைசெய்கின்றன. மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 6205 அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி) அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த அரசனும் இல்லை. மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்று பெயர்வைக்கப்பட்டவன் மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவனாவான். இன்னும் மோசமானவனாவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : […]

இலாஹி என்று பெயர் வைக்கலாமா?

இலாஹ் என்றால் கடவுள் – இறைவன் – என்று பொருள். இச்சொல்லுடன் யா என்ற எழுத்தைச் சேர்த்து இலாஹீ என்று நெடிலாக உச்சரிக்கும் போது என் இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனைச் சேர்ந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். முதல் அர்த்தத்தைக் கவனத்தில் கொண்டால் இவ்வாறு மனிதர்களுக்கு பெயர் வைக்க கூடாது. ஏனெனில் இது மனிதனைக் கடவுளாக்குவதாக ஆகி விடும். இரண்டாவது அர்த்தத்தை கருத்தில் கொண்டால் அவ்வாறு பெயர் வைக்கலாம். ஆனாலும் தவறான இன்னொரு அர்த்தமும் அதற்கு உள்ளதால் இந்தப் பெயரைத் தவிர்ப்பது தான் நல்லது

இரண்டு வயதைக் கடந்த குழந்தைகளுக்கு பால் புகட்டலாமா?

பின்வரும் வசனம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் பாலூட்ட வேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றது. وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ (233) 2 பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அல்குர்ஆன் (2 : 233) தாய்மார்கள் குழந்தைகளுக்கு முதல் இரண்டு வருடங்கள் கட்டாயமாக பாலூட்ட வேண்டும் என்றே இவ்வசனம் கூறுகின்றது. இரண்டு வருடத்திற்குப் பிறகு பாலூட்ட வேண்டும் என்ற கருத்தையோ பாலூட்டக் கூடாது என்ற கருத்தையோ இது கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு வருடம் […]

தத்துக்குழந்தைக்கு ஏன் சொத்துரிமை இல்லை?

இஸ்லாம் குழந்தையை எடுத்து வளர்ப்பதைத் தடை செய்யவில்லை. ஒருவர் இன்னொருவருடைய குழந்தையை எடுத்து வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையுமில்லை. அவ்வாறு எடுக்கப்பட்ட குழந்தையை வளர்ப்பவர் தன் குழந்தை என்று கூறிக் கொள்வதையே இஸ்லாம் தடை செய்துள்ளது. இன்றைக்கு நடைமுறையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு தகப்பன் ஒருவன் இருக்க அதை வளர்த்தவன் அக்குழந்தைக்கு தானே தகப்பன் என்று கூறும் நிலை உள்ளது. பொய்யான பேச்சுக்கள், போலிச் செயல்கள், போலி உறவுகள், தவறான நம்பிக்கைகள் இவற்றை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது. ஒருவன் ஒரு குழந்தையை எடுத்து வளர்த்தால் அதற்குரிய நன்மை அவனுக்கு உண்டு என்பது தனி விஷயம். ஆனால் இதற்காக அவன் அக்குழந்தைக்குத் தந்தையாகிவிட முடியாது. அக்குழந்தை உருவாகுவதற்கு […]

ஹாகிம் என்று பெயர் சூட்டலாமா?

வஅலைக்குமுஸ்ஸலாம். ஹாகிம் என்றால் நீதி வழங்குபவன் அதாவது நீதிபதி என்பது இதன் பொருளாகும். நீதிவழங்கும் அதிகாரத்தை அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருப்பதால் இந்தப் பெயரை மனிதர்களுக்கு சூட்டுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை. இவ்வுலகில் தீர்ப்பு வழங்கும் மனிதரைக் குறிக்க நபி (ஸல்) அவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். 7352حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ الْمَكِّيُّ حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ […]

அகீகா கொடுப்பது சுன்னத்தா?

أخبرنا عمرو بن علي ومحمد بن عبد الأعلى قالا حدثنا يزيد وهو ابن زريع عن سعيد أنبأنا قتادة عن الحسن عن سمرة بن جندب عن رسول الله صلى الله عليه وسلم قال كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى ‘ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப் (ரலி( நூல்: நஸயீ […]

சிறிய ஆண் குழந்தைகளுக்கும் தங்கம் ஏன் அணியக் கூடாது?

ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை. أخبرنا يعقوب بن إبراهيم قال حدثنا عبد الرحمن بن مهدي قال حدثنا حماد بن سلمة عن حماد عن إبراهيم عن الأسود عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال رفع القلم عن ثلاث عن النائم حتى يستيقظ وعن الصغير حتى يكبر وعن المجنون حتى يعقل أو يفيق நபிகள் நாயகம் (ஸல்) […]

அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்கு சூட்டலாமா?

அல்லாஹ்வின் பெயர்களை அல்லாஹ்வுக்குப் ப்யன்படுத்தும் போது எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோமா அந்தப் பொருளில் பயன்ப்டுத்தினால் அது குற்றமாகும். மனிதர்களுக்குரிய விதத்தில் பொருள் கொண்டால் அது தவறாகாது. இது குறித்து திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் விரிவாக விள்க்கியுள்ளதையே இதற்கு பதிலாகத் தருகிறோம். அது வருமாறு “ரஹீம்’ என்ற திருப்பெயரும் அல்லாஹ்விற்குரிய பெயரேயாகும். ஆனால் ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் போது “ரஹீம்’ என்ற அடைமொழியை அல்குர்ஆன் 9:128வசனத்தில் பயன்படுத்தியிருக்கிறான். ரஹீம் என்ற தன் பெயரையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் […]

கத்னா செய்யும் வயது எது?

நபி (ஸல்) அவர்கள் தம் பேரர்களான ஹஸன் ரலி ஹுஸைன் ரலி ஆகியோருக்கு ஏழாம் நாளில் கத்னா செய்தனர் என்று ஆயிஷா ரலி அறிவிக்கும் ஹதீஸ் ஹாகிம் பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஏழாம் நாளில் தான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பருவமடைந்தவுடன் (சுமார் பதினைந்து வயதில்) கத்னா செய்யலாம். நபி ஸல் காலத்தில் பருவ வயது அடைந்தவுடன் கத்னா செய்யும் வழக்கமிருந்தது. அதை நபி (ஸல்) ஆட்சேபிக்காமல் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். நபி ஸல் காலமான போது நான் கத்னா செய்யப்பட்டவனாக இருந்தேன். ஆண்கள் பருவ வயது அடையும் வரை மக்கள் கத்னா செய்ய மாட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலி […]

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. 1. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் தாய் தான் அக்குழந்தைக்கு மிகவும் உரிமை படைத்தவளாவாள். ஏனெனில் குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் பாலருந்தும் பருவத்தில் தாயினுடைய கவனிப்பில் இருப்பது தான் குழந்தையினுடைய உடல் நலத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். ஒரு பெண்மணி ” அல்லாஹ்வின் தூதரே என்னுடைய இந்த மகனுக்கு என்னுடைய வயிறு தான் (உணவுப்) பாத்திரமாகும். என்னுடைய மார்பகங்கள் தான் அவனுக்கு குடிபானமாகும். என்னுடைய மடி தான் […]

முஹம்மத் எனப்பெயர் வைப்பதாக நேர்ச்சை செய்யலாமா?

வணக்க வழிபாடுகளில் மட்டுமே நேர்ச்சை தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்க வழிபாடுகளை மட்டுமே நேர்ச்சையாகச் செய்ய முடியும். வணக்க வழிபாடுகள் இல்லாத காரியங்களில் நேர்ச்சை செய்ய முடியாது. அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 6696 முஹம்மது என்ற பெயரைச் சூட்டுவது வணக்கம் என்றோ அதனால் நன்மை கிடைக்கும் என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இவ்வாறு பெயர் வைக்குமாறு அவர்கள் ஆவர்வமூட்டவுமில்லை. எனவே இவ்வாறு பெயர்சூட்டுவது வணக்கம் அல்ல. வணக்கமில்லாத […]

தத்தெடுப்பது கூடுமா?

குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் அதே சமயம் எடுத்து வளர்ப்பதால் தந்தை, மகன் என்ற உறவோ, வாரிசுரிமையோ ஏற்பட்டு விடாது. நாம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறோம் என்றால் அந்தக் குழந்தையின் தந்தை பெயருக்குப் பதிலாக நம்முடைய பெயரைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை. இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் அக்குழந்தைக்கு அவர் தான் தந்தை என்று கருதும் வழக்கம் இருந்தது. வளர்ப்பு மகன் தன்னை எடுத்து வளர்த்தவருக்கு வாரிசாகி வந்தார். பின்பு இஸ்லாம் இதைத் தடை செய்து விட்டது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்கும் அதே வேளையில் அக்குழந்தையின் தந்தை எவரோ அவர் தான் அக்குழந்தைக்குத் தந்தையாக […]

அபுல் காசிம் என்று பெயர் வைக்கலாமா?

அபுல் காசிம் என்றால் காசிமின் தந்தை என்பது பொருள். நபிகள் நாய்கம் ஸல் அவர்களுக்கு காசிம் என்று மகன் பிறந்ததால் அவர்கள் அபுல் காசிம் காசிமின் தந்தை என்று அழைக்கப்பட்டார்கள். காசிம் என்று மகனைப் பெற்றவர்கள் இப்பெயரை புணைப் பெயராகச் சூட்டிக் கொள்ளலாம். ஆனால் குழந்தையாகப் பிறக்கும் போது யாருக்கும் பிள்ளை இருக்க மாட்டார்கள். எனவே காசிமின் தந்தை என்பது போல் பெயர் வைப்பது பொருளற்றதாகும். ஆனால் தடுக்கப்பட்டதாக ஆகாது. அபூ பக்ர், அபூ தாலிப் அபூ தல்ஹா, அபூ மூஸா என்றெல்லாம் பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது. பக்ரின் தந்தை, தாலிபின் தந்தை, தல்ஹாவின் தந்தை, மூஸாவின் தந்தை என்றெல்லாம் பெயர் வைப்பது அர்த்தமற்றதாகும். […]

நாகூர் மீரான் என்று பெயர் வைக்கலாமா?

நாகூர் என்றால் அது ஒரு ஊரின் பெயர். மீரான் என்றால் பார்சி மொழியில் தலைவர் என்று பொருள். நாகூர் மீரான் என்றால் நாகூர் தலைவர் என்று பொருள். நீங்கள் நாகூர் பஞ்சாயத்து போர்டு தலைவர் என்றால் இது அர்த்தமுள்ள் பெயராகும். இல்லாவிட்டால் அர்த்தமற்ற பெயராகும். பெயர்களுக்கு பொதுவாக அர்த்தம் பார்க்க அவசியம் இல்லை. ஸாலிஹ் (நல்லவன்) என்று பெயர் வைக்கப்பட்டவர் கெட்டவராக இருப்பார். இதனால் அவர் பெயரை மாற்ற அவசியம் இல்லை. நபிமார்களின் பெயர்களை வைத்துள்ள பலர் இப்லீஸாக இருக்கலாம். பெயர் என்பது ஒருவரை அறிந்து கொள்ளும் அடையாளம் தான். அதன் அர்த்தம் அப்படியே பொருந்த வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் அல்லாஹ்வுக்கு இணை […]

மூன்று வயது குழந்தைக்காக அகீகா கொடுக்கலாமா?

அகீகா என்பது குழந்தை பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும். அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி) நூல் : அபூதாவூத் (2455) ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது. السنن الكبرى للبيهقي – كتاب الضحايا وأخبرنا أبو الفتح هلال بن محمد بن جعفر الحفار ببغداد , أنبأ الحسين بن يحيى بن عياش […]

பெயர் சூட்டு விழா நடத்தலாமா?

குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்காக தனியே ஒரு விழாக் கொண்டாடுவதை மார்க்கம் காட்டித் தரவில்லை. இது மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட தேவையற்ற கலாச்சாரமாகும். குழந்தை பிறந்த ஏழாவது நாளில் அக்குழந்தைக்காக ஆடு அறுக்கலாம். இதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. அன்றைய தினம் குழந்தைக்குப் பெயர் சூட்டுவது நபிவழி. இவ்வாறு செய்வது தவறல்ல. ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதன் முடி மழிக்கப்பட்டு அதற்குப் பெயர் சூட்டப்படும். அறிவிப்பவர் : சமுரா பின் ஜ‚ன்துப் (ரலி) நூல் : அபூதாவூத் (2455)

அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா?

இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளை அறிவிக்கும் பெயர்களை இறைவன் அல்லாத மற்றவர்களுக்குச் சூட்டக்கூடாது. எந்தத் தன்மைகள் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இருக்கின்றதோ அது போன்ற தன்மைகளைக் கொண்ட பெயர்களை மனிதர்களுக்கு சூட்டுவது தவறல்ல. சில தன்மைகள் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இருந்தாலும் இறைவன் அத்தன்மைகளைப் பெற்றிருப்பதற்கும் மனிதர்கள் அத்தன்மைகளைப் பெற்றிருப்பதற்கும் இடையே பல வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். ஹகம் என்ற பெயரைச் சூட்டவேண்டாமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஹகம் என்றால் யாருடைய தீர்ப்பு மறுக்கப்படக் கூடாதோ அப்படிப்பட்டவருக்குச் சொல்லப்படும். அதாவது தவறில்லாத தீர்ப்பு வழங்குபவர் என்பது இதன் பொருள். இப்பெயரில் இறைத்தன்மை இருப்பதால் இதைச் சூட்டக் கூடாது என நபியவர்கள் […]

அகீகா ஏழாம் நாள் தாண்டி கொடுக்கலாமா?

பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுப்பதற்கே ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. 14,21 ஆம் நாள் கொடுப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர். அகீகாவிற்காக ஏழாம் நாள்,பதிநான்காம் நாள், இருபத்தி ஒன்றாம் நாள் (ஆடு) அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரலி),நூல்கள் : தப்ரானீ-அவ்ஸத், பாகம் :5, பக்கம் :136, தப்ரானீ-ஸகீர், பாகம் :2, பக்கம் :29, பைஹகீ பாகம் :9, பக்கம் : 303 இந்த ஆதாரப்பூர்வமான செய்தி இல்லை. இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்பவர் பலவீனமானவராவார். இவர் ஒரே ஹதீஸை எங்களிடம் மூன்று முறைகளில் அறிவிப்பார் என்று கத்தான் அவர்கள் […]

பிள்ளைகளிடம் பொய் வாக்குறுதி கொடுக்கலாமா?

4344 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ النَّيْسَابُورِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ ابْنُ سِنَانٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ بُدَيْلٍ عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ قَالَ بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ فَنَسِيتُ ثُمَّ ذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ فَجِئْتُ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ فَقَالَ يَا فَتًى لَقَدْ شَقَقْتَ عَلَيَّ أَنَا هَاهُنَا مُنْذُ ثَلَاثٍ أَنْتَظِرُكَ […]

நபிவு, அஃப்லஹ், ரபாஹ், பரக்கா, யஸார் என்ற பெயர்கள் வைக்கலாமா?

இதுபோன்ற சில பெயர்களை வைக்கக்கூடாது என்று சில நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான விவரங்களைக் காண்போம். حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ الرُّكَيْنِ عَنْ أَبِيهِ عَنْ سَمُرَةَ و قَالَ يَحْيَى أَخْبَرَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ الرُّكَيْنَ يُحَدِّثُ عَنْ أَبِيهِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُسَمِّيَ رَقِيقَنَا بِأَرْبَعَةِ أَسْمَاءٍ أَفْلَحَ وَرَبَاحٍ وَيَسَارٍ وَنَافِعٍ رواه مسلم சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் […]

ஆண் பெண் குழந்தைகளை மாற்றிக் கொள்ளலாமா?

ஒருவரின் குழந்தையை இன்னொருவர் எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. அண்ணன் தம்பிகள் மட்டுமின்றி அன்னியர்களாக இருந்தாலும் ஒரே சட்டம் தான். குழந்தை இல்லாதவர்கள் அன்பைப் பொழிவதற்கும், தள்ளாத வயதில் தங்களைக் கவனித்துக் கொள்வதற்கும் எந்தக் குழந்தையையும் எடுத்து வளர்க்கலாம். ஆனால் உறவினரின் குழந்தையை எடுத்து வளர்த்தாலும், அன்னியரின் குழந்தையை எடுத்து வளர்த்தாலும் அவர்கள் சொந்தப்பிள்ளைகளாக மாட்டார்கள். இது தான் முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும். இது குறித்து நம்முடைய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் விளக்கியதை தருகிறோம். அதுவே உங்கள் சந்தேகங்களைப் போக்கும் 317. தத்துப் பிள்ளைகள் இவ்வசனங்களில் (33:4, 58:2) தத்துப் பிள்ளைகள் சொந்தப் பிள்ளைகளாக முடியாது என்று கூறப்படுகிறது. இஸ்லாம் போலித்தனமான எல்லாவிதமான உறவுகளையும் நிராகரிக்கிறது. […]

பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக எளிதாக இருக்கும் நிலையில் அகீகா ஏன்?

அகீகாவுடன் தலைமுடி மழிப்பது தொடர்பான செய்தி தாங்கள் குறிப்பிடுவது போல் புகாரி, முஸ்லிமில் இல்லை. முஸ்னத் அஹ்மதில் 19337வது ஹதீஸாக இது பதிவு செய்யப் பட்டுள்ளது. ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும் என்பது இந்தக் காலத்தில் மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு அவ்வாறு தான் இருந்திருக்கும். எனவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்யுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இந்த ஹதீஸை நமது சகோதரர்கள் நடைமுறைப் படுத்தியே வருகின்றார்கள். இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனினும் தங்களின் குழந்தைக்கு அவ்வாறு […]