Search Posts

Category: சட்டங்களின் சுருக்கம்

a103

உணவுகள் சட்ட சுருக்கம்

உண்ணக்கூடாதவைகளில் சில. 1) தாமாகச் செத்தவை (முறையாக அறுக்கப்படாமல் செத்தவை. சாகடிக்கப்பட்டவை) 2) கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்ததும் 3) அடிப்பட்டுச் செத்ததும், 4) கீழே விழுந்து செத்ததும் 5) முட்டப்பட்டுச் செத்ததும், 6) வன விலங்குகளால் சாப்பிடப்பட்டுச் செத்ததும் உண்ண ஹலாலான பிராணி செத்துவிட்டால், உண்பதற்கு உதவாத பொருள்களை வேறு வகையில் பயன்படுத்தலாம். (உதா, ஆட்டின் தோல்) உண்ண ஹராமாக்கப்பட்ட பிராணியை, கொழுப்பு போன்ற அதன் பிற பாகங்ளை விற்கவும், வேறு வகையில் பயன்படுத்தவும் கூடாது. (உதா, பன்றியின் கொழுப்பு) வேட்டை பிராணிகள் கொன்ற பிராணியை சாப்பிடலாம். (முறையாக அறுக்கப் படவில்லை என்ற பிரச்சனை இல்லை) வேட்டை பிராணி சாப்பிட்டிருந்தால், அதை நாம் சாப்பிடக் கூடாது. வேட்டை […]

ஜனாஸா தொழுகையின் சட்ட சுருக்கம்

ஜனாஸா தொழுகை கட்டாய சமுதாய கடமை ஓரிருவர் தொழுதாலும் கடமை நீங்கிவிடும் இறந்தவரின் குடும்பத்தினரே தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் இறந்தவரை குறுக்கு வசமாக வைக்கவேண்டும். ஆண் ஜனாஸா தலைக்கு நேராக இமாம் நிற்கவேண்டும் பெண் ஜனாஸா வயிற்றுக்கு நேராக இமாம் நிற்கவேண்டும் உளு அவசியம், கிப்லாவை முன்னோக்க வேண்டும் ருகூவு, ஸஜ்தா, அத்தஹியாத்து கிடையாது நான்கு அல்லது ஐந்து தடவை தக்பீர் கூறலாம் முதல் தக்பீருக்கு பின், அல்ஹம்து, மற்றும் பிற அத்தியாயம் ஓத வேண்டும் சத்தமாக அல்லது மெதுவாக ஓதலாம் இரண்டாவதற்கு பின், நபியின் மீது ஸலவாத் கூற வேண்டும் மூன்றாவது, நான்காவது தக்பீருக்கு பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமைக்கா துஆ செய்ய வேண்டும். இருபுறமும் நின்றவாறே ஸலாம் கூறி தொழுகையை […]

சத்தியம் சட்ட சுருக்கம்

சத்தியம் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்யவேண்டும் மற்றதின் மீது சத்தியம் செய்தால், லாயிலாஹ இல்லல்லாஹ் கூற வேண்டும் வாக்குறுதி அடிப்படையிலான சத்தியத்தை நிறைவேற்றுவது அவசியம் சத்தியம் செய்தவர் இயலாவிடில், முறிக்கலாம். முறித்தால் பரிகாரம் செய்யவேண்டும். இன்ஷா அல்லாஹ் சேர்த்துக் கூறினால் பரிகாரம் இல்லை பைஅத் என்றால் உறுதிமொழி என்று பொருள் தொழுகை, நோன்பு போன்ற மார்க்க பைஅத் நபியிடம் மட்டுமே செய்யவேண்டும் கொடுக்கல், வாங்கல் உலக உறுதிமொழி யாரிடமும் செய்யலாம்  பொய் சத்தியம் செய்வது பெரும் பாவம் அவசரப்பட்டு சத்தியம் செய்தால் நிறைவேற்ற வேண்டியதில்லை. ”நீ செய்ய வேண்டும்” என பிறர் செய்ய வேண்டிய செயலுக்கு சத்தியம் கூறலாகாது எனினும், இரத்த உறவுகளுக்கு இடையே கூடும் பிறரின் […]

நேர்ச்சை சட்ட சுருக்கம்

நேர்ச்சையை தவிர்ப்பது நன்று. துஆ செய்ய செய்துவிட்டால், நிறைவேற்றுவது அவசியம் தவறான நேர்ச்சைகளை நிறைவேற்றக் கூடாது. நேர்ச்சை இஸ்லாமிய அமல்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அல்லது உலக நன்மையான காரியமாக இருக்கலாம். கூடாத நேர்ச்சைகள் உதாரணத்திற்கு, 1) மௌன விரதம் 2) முடி வெட்டுதல் 3) அலகு குத்துதல் 4) வெறும் காலால் நடத்தல் 5) வெயிலில் நிற்றல் 4) சாப்பிடாமல் இருத்தல் 5) செருப்பு, சட்டை அணியாதிருந்தல் 6) முழு சொத்தையும் தர்மம் செய்தல் போன்றவை சக்திக்கு அப்பாற்பட்ட விஷயத்தை நேர்ச்சை செய்தால் முறிக்க வேண்டும். முறித்தால் பரிகாரம் செய்ய வேண்டும். அது, 1) பத்து ஏழைகளுக்கு உணவு, முடியாவிட்டால், 2) பத்து ஏழைகளுக்கு […]

இரவுத் தொழுகையின் சட்டங்கள்

ரமளான் மற்றும் அனைத்து இரவுகளிலும்  தொழப்படும் சுன்னத்தான தொழுகையே இரவுத் தொழுகை எனப்படும். பல்வேறு பெயர்கள் – 1) ஸலாத்துல் லைல் 2) கியாமுல் லைல் 3)  தஹஜ்ஜுத் 4) வித்ர் தராவீஹ் என்ற பெயர் ஹதீஸில் இல்லை. ரமளான் இரவுத் தொழுகையினால் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் ஆரம்ப நேரம் இஷாவிற்கு பின்னிலிருந்து இறுதி நேரம் பஜ்ர் வரை எனினும், வித்ரை மட்டும் பஜ்ருக்கு பின்னரும் தொழலாம் இரவுத்தொழுகை தொழாவிடில், பகலில் 12 ரகஅத் தொழலாம் எண்ணிக்கை, 4+5 வித்ர், 8+3 வித்ர், 8+5 வித்ர், 10+1 வித்ர், 10 ரகஅத் மட்டும் (வித்ர் இல்லை), 12+1 வித்ர், வித்ர் சேர்த்து 7 வித்ர் சேர்த்து 9 […]

பெருநாள் தர்மம் ஃபித்ராவின் சட்டங்கள்

  பெருநாள் தொழுகைக்கு முன், ஃபித்ரா கட்டாயம் தரவேண்டும். நோன்பில் குறைகள், ஏழைகளுக்கு பரிகாரமாக ஃபித்ரா உள்ளது வேலையாள் தவிர, குழந்தை உட்பட வீட்டில் உள்ள முஸ்லிம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என தரவேண்டும் ஒரு ஸாவு என்பது 4 முகத்தல் அளவை. இரு கைகள் இணைக்கும் போது எவ்வளவு கொள்ளுமோ, அதுவே ஒரு முகத்தல். அரிசி, கோதுமை என தரலாம் உணவாக அல்லது பணமாக தரலாம் மட்டரகமானதை தரக்கூடாது (ஹாகிம்) கூட்டாக பெற்று விநியோகிப்பதே சிறந்தது.

நோன்பின் சட்ட சுருக்கம்

ரமளான் நோன்பு ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாய கடமை இறையச்சத்தை அதிகமாக்குவதும், பொய்யான செயல்களை விட்டுஒதுங்குவதுமே நோன்பின் நோக்கங்கள் நோன்பிற்குரிய கூலி முன் பாவங்கள் மன்னிக்கப்படுதல் நோன்பிலிருந்து நிரந்தர விலக்கு பெற்றவர்கள் – தள்ளாத வயதினர், நிரந்தர நோயாளிகள் தற்காலிக விலக்கு பெற்றவர்கள் – 1)பிரயாணிகள் 2)தற்காலிக நோயாளிகள், 3)கர்ப்பிணிகள், 4)பாலூட்டும் தாய்மார்கள்,  5)மாதவிடாய் பெண்கள் பிரயாணிகள் நோன்பை விடுவது கட்டாயம் அல்ல. விடுபட்ட நோன்பை வைப்பதற்கு காலக்கெடு எதுவுமில்லை. பிறையை கண்ணால் பார்த்த பின்பே நோன்பு நோற்க வேண்டும். பிறை தெரியாவிடில், ஷஅபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.   அனைத்து செயலுக்கும் தூய்மையான நிய்யத் அவசியம். எனினும் ஹஜ்,உம்ரா தவிர, வேறு […]

காலுறை மீது மஸஹ் சட்டங்கள்

ஆண்களும், பெண்களும் காலுறை அணிந்தால் மஸஹ் செய்யலாம் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்வது மஸஹ் ஆகும் நிபந்தனை – உளுவுடன், கால் தூய்மையாக உள்ள நிலையில், காலுறை அணிந்திருக்க வேண்டும். பிறகு உளு முறிந்து உளு செய்யும் போது, கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம் மலஜலம் கழித்த பிறகு உளு செய்யும் போதும், கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம் அதிகபட்சம் ஒரு நாள் (24 மணி நேரம்) வரை மஸஹ் செய்யலாம். பிரயாணியாக இருந்தால் 3 நாள் வரை செய்யலாம். குளிப்பு கடமையானால், மஸஹ் செய்யமுடியாது, மேற்புறத்தில் தான் மஸஹ் செய்ய வேண்டும். அடிப்புறம் கூடாது.  

ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்

நோய்நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை ஓதி மந்திரிக்கும் முறையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் தெரிந்து பின்பற்றுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு ஹஜ்ரத்தோ அல்லது மோதினாரோ ஓதிப் பார்த்தால் தான் குணமாகும் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம். வலிக்கு ஓதிப் பார்த்தல் நபியவர்கள் வலியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்முடைய ஆட்காட்டி விரலில் எச்சிலை தொட்டு அதனால் மண்ணைத் தொட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து ஓதிப் பார்த்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளமோ […]

ஆதாரங்கள்

    முஃமினா? முஸ்லிமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை விட்டுவிட்டார்கள். ஆகவே நான், அல்லாஹ்வின் தூதரே! அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகின்றேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை முஸ்லிம் என்று சொல் என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் வந்த போது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! […]