Search Posts

Category: 23-மூடநம்பிக்கைகள்

q130

முஹர்ரம் மாதமும் மூடநம்பிக்கையும்

ஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை நபிமொழிகள் சிறப்பித்துக்­ கூறுகின்றன. ஆனால் முஸ்லிம்களில் பலர் இம்மாதத்தைப் பீடை மாதமாக எண்ணுகின்றனர், நபிகளாரின் பேரர் ஹுஸைன் (ரலி) அவர்கள் இம்மாதத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதால் இம்மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது என்று எண்ணுகின்றனர், திருமணம் செய்யக்கூடாது, உடலுறவு கொள்ளக்கூடாது, அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று நம்பி அல்லாஹ் அனுமதித்த பல செயல்களைத் தடைசெய்து கொள்கின்றனார். இன்னும் சிலர் தங்கள் சோகத்தை ­ வெளிப்படுத்தும் வகையில் ஆயுதங்களால் தங்களைக் காயப்படுத்திக் கொள்கின்றனர். துன்பம் வரும்போது பொறுமையை மேற்கொள்வதும் இறைவன் ஏற்படுத்திய விதியை ஏற்றுக் கொள்வதும் இறை நம்பிக்கையாளனின் கடமையாகும். துயரத்தின்போது அதிகபட்சமாக மூன்று நாட்கள் துக்கமாக […]

நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா?

இது தொடர்பாக ஒரு நபிமொழி இடம் பெற்றுள்ளது. முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர், பாகம் : 15, பக்கம் : 408,ஷுஅபுன் ஈமான்-பைஹகீ, பாகம் : 8, பக்கம் : 44, முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் : 8, பக்கம் : 47, லுஃபாவுல் உகைலீ, பாகம் : 4, பக்கம் : 332, அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் :201. இந்நூல்களில் லுஃபாவுல் உகைலீ, அல்காமில் ஆகிய நூல்களில் இடம்பெற்றிரும் செய்தியில் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் […]

நபிகளாருக்கு சஃபர் மாதத்தில்தான் நோய் ஏற்பட்டதா?

நபி (ஸல்) அவர்களுக்கு பல தடவை நோய் ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களால் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்” என்று சொன்னார்கள். நான், “(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’ […]