Search Posts

வந்த)., 13 உயர்வான: ஷர் துணை – வேண்டும்!

“வீர மரணத்தை முகப்பாக பாடி

வந்த உயர்வான மாதா நீர் துணை செய்ய வேண்டும்”

வீர மரணமடைந்த உயர்ந்த தாயாகிய பீமா அவர்களே! நீங்கள் தான் எங்களுடன் துணை நிற்க வேண்டும் என்று இந்த வரி கூறுகிறது.

பீமா ஷஹீதாக வீர மரணமடைந்தார்களா? அல்லது இயற்கை மரணம் வந்தடைந்ததா? என்பது தெரியவில்லை.

அடுத்து, தனக்கு என்ன தீங்கு ஏற்பட்டாலும் அதை நீக்குபவன் அல்லாஹ் தான் என்பதை மறுத்து பீமாதான் தனக்கு ஏற்படும் தீங்கைத் தடுத்து பக்கபலமாக நிற்க வேண்டும் என்று கூறுகின்றார்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!” என்று கேட்பீராக! “அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 39:38

அல்லாஹ்வைத் தவிர தீங்கைத் தடுக்கும் ஆற்றலோ அருளை வழங்கும் ஆற்றலோ யாருக்கும் இல்லை. என்ன தீங்கு ஏற்பட்டாலும் இறைநம்பிக்கையாளர்கள் அவனையே சார்ந்திருக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.

ஆனால், இந்தப் பாடல் வரியோ பீமாவே துணை என்று கூறுகிறது.

மாற்று மதத்தவர்கள் தங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தங்களது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களது வாகனங்களில் காளிகாம்பாள் துணை, அம்மன் துணை, முருகன் துணை என்று சொல்வதற்கும் பீமா துணை என்று இப்பாடல் சொல்வதற்கு என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பாதுகாவலர்களாக ஏற்படுத்திக் கொண்டோருக்குத் திருக்குர்ஆன் உதாரணம் கூறுகின்றது.

அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (இதை) அவர்கள் அறியக் கூடாதா?

அல்குர்ஆன் 29: 41

இந்த வசனத்தில் அல்லாஹ்வை யன்றி மற்றவர்களைப் பாதுகாவலர் களாக ஏற்படுத்திக் கொண்டோர் சிலந்திப் பூச்சியை போன்றோர் என்றும் அவர்களின் பாதுகாவலர்கள் சிலந்தி வலையைப் போன்ற பலவீனமான வர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

மொத்தத்தில் “அடியார்க்கு அருள் செய்யும் அம்மா! அழகான கடலோரம் வாழ்கின்ற பீமா!” என்ற இந்தப் பாடலின் மூலம் அருள் புரியும் அதிகாரம் பீமாவின் கையில் தான் இருக்கின்றது என்றும் பீமா உயிருடன் தான் இருக்கின்றார் என்றும் இணைவைப்புக் கொள்கையை திரும்பத் திரும்ப விதைத்து இஸ்லாத்தின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். இத்தகைய இந்தப் பாடல் இஸ்லாமிய கருத்துக்களைச் சொல்லும் பாடலா? என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று

– எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்

இறைச்செய்தி மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரம்.

அதன் இரு பகுதிகளாக இருக்கும் குர்ஆனையும் நபிமொழி களையும் முறையாக முழுமையாகப் பின்பற்றும் போதுதான், ஈருலகிலும் வெற்றி பெற முடியும்.

இதன்படி நாம் வாழும்போது, நமக்கு பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் வரும். இதை ஏற்றுக் கொள்ளாத நபர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும்.

நம்மை எதிர்த்து நிற்பவர்களின் பட்டியலில் பெற்றோர், நண்பர்கள், சொந்தபந்தங்கள், அண்டை வீட்டார் என்பதற்கும் மேலாக, சில நேரங்களில் ஒட்டுமொத்த ஊரே நமக்கு ஒன்று திரண்டு நிற்கும்.  ஏராளமான இடங்களில் இவ்வாறு ஏகத்துவத்திற்கு எதிராகக் களமிறங்கி இருக்கிறார்கள்.

இந்த எதிர்ப்புக்கு காரணம் என்ன? இதுபோன்ற நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்வது? இதிலிருந்து பெற வேண்டிய படிப்பினை என்ன? என்பது குறித்து சில கருத்துக்களை இக்கட்டுரை மூலம் காண்போம்.

ஊர் எதிர்ப்பும் பின்னணியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *