Category: 14-நவீன பிரச்சனைகள்
வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் சுகங்களை மட்டும் தியாகம் செய்யவில்லை. மானம் மரியாதையும் இழந்து வேலை செய்யும் அவல நிலையிலும் பலர் உள்ளனர் என்பது இவரது கேள்வியில் இருந்து தெரிகிறது. இப்படியெல்லாம் கெட்ட வார்த்தைகளால் ஏச்சு வாங்கி செருப்படி வாங்கி நாய் பிழைப்பு பிழைத்து சம்பாதிக்கும் பொருளாதாரத்தை தாயகத்தில் உள்ள உறவினரும் பெண்களும் பாழாக்கி வீண் விரயம் செய்வதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. குடும்பத்தினர் சொகுசாக வாழ்வதற்காக ஆண்கள் எத்தகைய இழிவுகளையெல்லாம் சுமக்கிறார்கள் என்பதை உணராமல் சில பெண்கள் துரோகச் செயலில் ஈடுபடுவதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆண்கள் படும் கஷ்டங்களை பெண்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தான் இதை […]
மற்றவர்கள் புனிதம் என்று கருதும் பொருட்களை தவிர மற்றவற்றை விற்கலாம். மாற்று மதத்தினர் புனிதமாகக் கருதும் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது. 13971حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ أَنَّ عَطَاءً كَتْب يَذْكُرُ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَامَ الْفَتْحِ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَنَازِيرِ وَبَيْعَ الْمَيْتَةِ وَبَيْعَ الْخَمْرِ وَبَيْعَ الْأَصْنَامِ رواه أحمد நபி (ஸல்) அவர்கள் […]
கருப்பு தவிர மற்ற நிறங்களில் அடிக்கலாம். தலைமுடி நரைத்தவர்கள் தலைக்கு சாயம் பூசும் நடைமுறை நமது சமுதாயத்தில் இருக்கின்றது. தலைமுடி நரைக்காவிட்டாலும் அழகிற்காக முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பழக்கமும் சிலரிடம் இருக்கின்றது. நரைத்த தலைமுடி கொண்டவர்கள் கருப்பு நிறத்தைத் தவிர்த்து வேறு ஏதாவது ஒரு நிறத்தால் தலைக்கு சாயம் பூச வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே யாருக்கேனும் வெள்ளை நிறத்தில் முடி இருக்குமேயானால் அவர் அதன் நிறத்தை மாற்றுவது அவசியம். ஆனால் கருப்பு நிறத்தைப் பயன்படுத்தக் கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம். 3462 حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ […]
கூடாது. அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும். இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களில் அஜினா மோட்டா சேர்ப்பது சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 51 வகையான உணவுப் பொருட்களில் அஜினாமோட்டா சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் […]
வைக்கலாம். சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல. ரிங் டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் அழைப்பை ஏற்கும் போது குர்ஆனை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படும் என்பதைத் தான் இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர் இது குர்ஆனை அவமதிப்பதாகும் என்று கூறுகின்றனர். குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் தேவை ஏற்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் இவர்களின் வாதத்தை ஏற்கலாம். தொழுகையை இடையில் நிறுத்தக் கூடாது என்று தடை உள்ளது போல் குர்ஆன் ஓதுவதை தேவைப்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று தடையேதும் இல்லாத […]
வாழ்த்துவது போன்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது. மார்க்த்திற்கு உட்பட்டு இறைவனிடம் பிரார்திப்பது போன்ற வார்த்தைகளை கொண்டு சொல்லலாம். முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதியில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமில்லை. மற்ற சமுதாய மக்களுடன் வாழும் போது அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அனபைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடண்பாடு இல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் சொல்லாவிட்டால் நம்மை மத வெறியர்களாகக் கருத்தும் நிலை ஏற்படும். நாளை சத்தியத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் இது தடையாக அமைந்து விடும். பின்னர் நட்சத்திரங்களைக் கவனமாகப் பார்த்தார். நான் நோயாளி எனக் கூறினார். அவரை விட்டு […]
செல்லலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் இரண்டு வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர். حدثنا مسعود بن جويرية قال حدثنا وكيع عن هشام عن قتادة عن سعيد بن المسيب عن علي قال صنعت طعاما فدعوت النبي صلى الله عليه وسلم فجاء فدخل فرأى سترا فيه تصاوير فخرج وقال إن الملائكة لا تدخل بيتا فيه تصاوير நஸயீ 5256 தமது மருமகன் அலீ (ரலி) அவர்கள் விருந்து ஏற்பாடு செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்த போது வீட்டில் உருவங்கள் உள்ள அலங்காரத் திரையைப் […]
தொழுகை போன்ற கடமையை செய்வதற்கு சம்பளம் கொடுக்கக்கூடாது. மற்ற வேலைகளுக்காக தரலாம். வணக்கம் என்பது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்யப்பட வேண்டும் என்பதிலோ, அதற்காக மனிதர்களிடம் கூலி கேட்கக் கூடாது என்பதிலோ இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் ஒருவர் மார்க்கப் பணிக்காகத் தனது முழு நேரத்தையும் செலவிடுகிறார். அதன் காரணமாக அவரால் தொழில் செய்யவோ பொருளீட்டவோ இயலவில்லை. அத்துடன் அவர் வசதி படைத்தவராகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் அவரது வணக்கத்துக்குக் கூலியாக இல்லாமல் அவரது தேவையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உதவித் தொகை வழங்கலாம். இத்தகையோருக்கு வழங்குவதற்குத் தான் முதலிடம் அளிக்க வேண்டும். அப்படி வழங்கப்படும் உதவித் தொகை அவர் செய்யும் […]
கீழ் உள்ளதில் முதல் முறைக்கு மட்டும் அனுமதி உள்ளது, சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. 1-கணவனின் உயிரணுவை எடுத்து,மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து சோதனைக் குழாயில் வளர்த்து அதை மனைவியின் கருவறையில் செலுத்துவது ஒரு முறையாகும். 2-கணவன் அல்லாத வேறொரு ஆணிடமிருந்து உயிரணுவை எடுத்து அதனுடன் ஒரு பெண்ணின் கரு முட்டையைச் சேர்த்து குழந்தை பெற வைப்பது மற்றொரு முறையாகும். 3- கணவன் அல்லாத இன்னொரு ஆணின் உயிரணுவை இன்னொரு பெண்ணின் சினை முட்டையுடன் சேர்த்து குழாயில் வளர்த்து ஒரு பெண்ணின் கருவறையில் செலுத்துவது இவற்றில் முதலாவது வழிமுறைக்கு மட்டுமே மார்க்கத்தில் அனுமதி உள்ளது. உங்கள் மனைவியர் உங்களின் […]
கேடு விளைவிக்காத கடல்வாழ் உயிரினம் அனைத்தும் ஹலால். أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَلِلسَّيَّارَةِ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ(96)5 உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அல்குர்ஆன் (5 : 96) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி). நூல்கள்: அஹமது 6935 பொதுவாக கடலில் உணவாக கிடைக்கும் […]
விளையாட்டில் பங்கு பெறாதவர் வெற்றி பெற்றவருக்கு பரிசளித்தால் தவறில்லை. விளையாடுபவர்களிடம் இருந்து வெற்றி பெற்றவருக்கு பணம் வந்தால் அது சூதாட்டம். சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும். இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால் அது பரிசு எனப்படும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இவ்வாறு எந்த விளையாட்டையும் விளையாடலாம். அது சூதாட்டமாகாது. போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகையைச் செலுத்தி, யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் விளையாடினால் அது சூதாட்டமாகி […]
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நகப் பாலிஷ் இடலாம். தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் நனைய வேண்டியது அவசியமாகும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் மேனி நனைய வேண்டும். நகப் பாலிஷ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே விற்பனை செய்யப்படுகின்றது. நைல் பாலிஷ் இட்டவர்கள், உளூச் செய்யும் போதெல்லாம் அதை நீக்கி விட வேண்டும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் நீக்கிட வேண்டும். தண்ணீர் ஊடுருவுவதைத் தடுக்காத முறையில் (மருதாணி சாயம் போல்) நைல் பாலிஷ் கண்டுபிடிக்கப்படுமானால் எல்லா நேரங்களிலும் அதை இடலாம். தொழுகையும், குளிப்பும் கடமையாகாத சிறுவர், சிறுமியருக்கு இடுவதையும் தடுக்க எந்த […]
அணியலாம். தங்க ஆபரணங்களை அணிவதை மட்டுமே ஆண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي رواه النسائي அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பட்டை […]
இதற்குக் காரணம் எதையும் இஸ்லாம் கூறவில்லை. அதிக விலை உள்ள உலோகம் என்பதற்காக தங்கம் தடை செய்யப்படவில்லை. அதை விட அதிக விலை உடைய பிளாட்டினம் போன்றவைகள் ஆண்களுக்குத் தடுக்கப்படவில்லை. தங்கம் இரும்பை விடக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டாலும் அப்போதும் அது ஆண்களுக்கு தடுக்கப்பட்டதாகவே இருக்கும். இது குறித்து முஸ்லிம் அறிஞர்கள் சிலர் ஆய்வு செய்து ஒரு உண்மையை வெளிப்படுத்தி உள்ளனர். தங்கம் எனும் உலோகம் வெப்பத்தை விரைவில் வெளியேற்றக் கூடியது என்று சோதனைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. உலகில் உள்ள உலோகங்களை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி தண்ணீரில் போட்டு உடனே வெளியே எடுத்தால் அதில் உள்ள வெப்பம் முழுமையாக வெளியேறாமல் அது சிறிது நேரம் சூடாகவே […]
பூஜிக்கப்படாத உணவாக இருந்தால் ஹராம் இல்லை. அந்த சபைக்கு சென்று உண்ணக்கூடாது, ஆகுமான உணவுப் பொருட்களை மாற்று மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. பன்றி இறைச்சி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சி தானாக செத்தவை இரத்தம் மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பூஜை செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை ஹராம் என்று குர்ஆன் கூறுகின்றது. சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرْ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ […]
தாராளமாக பேட் மூலம் கொசுவைக் கொல்லலாம். நெருப்பால் தண்டனை கூடாது என்ற கட்டளை இருப்பது உண்மை தான். இது மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தால் அவர்களை நெருப்பில் எரித்து கொல்லக் கூடாது என்பது தான் பொருள். மனிதர் அல்லாத உயிரனத்தை எரிக்கக் கூடாது என்பது பொருள் அல்ல. அல்லாஹ் தண்டிப்பது போல் தண்டிக்க வேண்டாம் என்ற சொல்லே இதைத் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் மறுமையில் நெருப்பால் தண்டனை அளிப்பது மனிதர்கள், ஜின்கள், ஷைத்தான்களுக்கு மட்டுமே. கொசுக்களுக்கோ இன்ன பிற ஜீவன்களுக்கோ அல்லாஹ் தண்டனை அளிப்பதில்லை. மேலும் பின்வரும் ஹதீஸில் இருந்தும் இதை அறியலாம். حدثنا يحيى بن بكير حدثنا الليث عن يونس […]
இவ்வுலகில் உறுப்புகளை தானம் செய்வதற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இவ்வுலகில் நல்லவராக வாழ்நத ஒருவர் விபத்தில் கைகளை இழந்து விட்டால் அல்லது கண்களை இழந்து விட்டால் அவர் மறுமையிலும் கைகளை இழந்தவராக அல்லது கண்களை இழந்தவராக எழுப்பப்படுவார் என்பது கிடையாது. மறுமையில் கெட்டவர்கள் குருடாக எழுப்பப்படுவார்கள் என திருக்குர்ஆன் கூறுகிறது. وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى (124) قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا (125) قَالَ كَذَلِكَ أَتَتْكَ آَيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى (126) எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை […]
இதில் வணங்குதல் போன்ற அர்த்தம் இல்லை. இந்த வாழ்த்துக்களைத் தவிர்த்து சலாம் கூற இயலுமானால் சலாம் கூறிக் கொள்ள வேண்டும். குட்மார்னிங் (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங் (நல்ல மாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்நைட் (நல்ல இரவாக இருக்கட்டும்) ஆகிய வார்த்தைகள் பிரார்த்தனை வடிவத்தில் உள்ளன. பிரார்த்தனை செய்யும் தோரணையில் அமைந்துள்ள இவ்வார்த்தைகளில் பிறரை வழிபடும் இணை வைப்பு இல்லை. எனவே இவ்வார்த்தைகளை ஒருவர் கூறினால் பிறரை வழிபட்டவராக ஆக மாட்டார். மேலை நாட்டவர்களே இவ்வார்த்தைகளை உலகுக்கு கற்றுக் கொடுத்தனர். இஸ்லாம் மனித குலத்துக்கு சலாம் கூறுவதைக் கற்றுக் கொடுத்துள்ளது. இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ள ஸலாத்துடன் இவ்வாழ்த்துக்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஸலாம் கூறுவதே சிறந்த வாழ்த்தாகவும் எல்லா காலங்களிலும் […]
அணியலாம். அனைத்து நல்ல காரியங்களையும் வலது கரத்தால் ஆரம்பிக்க வேண்டும் என்பது நபி வழி தான். ஆனால் இதைச் சரியான முறையில் அவர் புரிந்து கொள்ளாததால் இப்படிக் கேட்டுள்ளார். எந்தக் காரியங்கள் வலது கையாலும் இடது கையாலும் செய்வது சமமான தரத்தில் உள்ளதோ அது போன்ற காரியங்களில் வலதைப் புறக்கணித்து விட்டு இடது கைக்கு முக்கியத்துவம் அளித்தால் தான் வலது பக்கக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று ஆகும். எந்தக் காரியம் வலது கையால் செய்வதை விட இடது கையால் செய்வது தான் அதிக வசதியானது என்று உள்ளதோ அந்தக் காரியத்தை இடது கையால் செய்வது நபிவழியைப் புறக்கணித்ததாக ஆகாது. வலது பகுதியைப் புறக்கணித்ததாகவும் ஆகாது. பொதுவாக […]
பருகுவதுதான் தவறு. வாசணைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம். ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடிய வகையில் இதைப் பயன்படுத்துவது மட்டுமே தவறு. போதை ஏற்படாத வகையில் இதைப் பயன்படுத்தினால் தவறில்லை என்ற முடிவுக்கு வரலாம். போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ […]
மார்க்கம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் நபிகள் நாயகம் ஸல் தவிர வேறு யாரிடமும் பைஅத் செய்யக் கூடாது. இது அதுபோன்றது இல்லை. தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை முறையாக நிறைவேற்றுவதாகவும் மார்க்கம் தடை செய்த பாவமான காரியங்களைச் செய்ய மாட்டேன் என்றும் உறுதிமொழி அளிப்பதற்கு பைஅத் என்று சொல்லப்படுகின்றது. இந்த ஆன்மிக பைஅத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் செய்யக்கூடாது என்றே நாம் கூறி வருகின்றோம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினராக சேர வருபவரிடம் உறுப்பினர் படிவத்தில் குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டும் என உறுதி மொழி வாங்கப்படுகின்றது. ஆன்மிக விஷயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் […]
தவறுகளை சுட்டிக்காட்டலாம். விமர்சனம் செய்யலாம். ஆனால் ஆயுதம் தாங்கி போராடி மக்களை கொன்று குவிக்கக் கூடாது. ஒரு இஸ்லாமிய அரசுக்குக் கீழ் வாழ்பவர்கள் அரசு செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்ட சக்தி இருக்குமேயானால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகின்றது. 4138 أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ كَلِمَةُ […]
தேவைப்படாத பிரதிகளை அழிப்பதற்கு நாம் விரும்பிய எந்த வழியை வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். பயன்படுத்த இயலாத பழைய குர்ஆன் பிரதிகளை சிலர் எரித்துவிட வேண்டும் என்றும் சிலர் மண்ணில் புதைக்க வேண்டும் என்றும் சிலர் கிணற்றில் போட வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால் இவ்விஷயத்தில் மார்க்கம் எந்த நிபந்தனைகளையும் இடவில்லை. குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாத காரணத்தால் இவ்விஷயத்தில் பலர் குழம்புகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் காகிதத்தில் வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது. குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை […]
சமீபகாலமாக இது போன்ற வதந்திகள் அதிகரித்து வருகின்றன. மீன் உடம்பில் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது என்றும் வானத்தில் அல்லாஹ் என்ற வார்த்தையின் வடிவில் மேகக் கூட்டம் திரண்டது எனவும் இன்னும் இது போன்று பல செய்திகள் மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகின்றது. இணையதளத்தில் வெளியிடப்படும் இது போன்ற செய்திகள் நம்புவதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஒரு பேச்சுக்கு இவையெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும் இவை இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு எந்த வகையிலும் உதவாது. ஏனென்றால் மாற்று மதத்தில் உள்ளவர்களும் தங்கள் நம்பிக்கைக்குத் தோதுவாக இது போன்ற நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். பிள்ளையார் வடிவில் பப்பாளி வந்தது. ஏசுவினுடைய தோற்றத்தில் மேகக் கூட்டங்கள் திரண்டது என்றெல்லாம் பலவாறு […]
செல்லலாம். இப்போது அதிகமான மக்கள் பயன்படுத்தக் கூடிய செல் போன்களில் குர்ஆன் டெக்ஸ்ட் குர் ஆன் அரபி மூலம் மார்க்க நூல்கள், பயான்கள் ஆகியவை பதிவு செய்யக்கூடிய வகையில் தான் உள்ளன. மார்க்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் கழிவறை சென்றால் என்ன செய்ய வேண்டும்? இவர்களின் செல்போனுக்குள் குர்ஆன் உள்ளதால் அதைக் கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்தால் அது போல் குர்ஆன் ரிங்டோனாக வைத்திருப்பவரும் செல் போனை கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் தவிர்க்கலாம். அல்லது வெளியே வைக்க முடியாத நிலை இருந்தால் கழிவறை செல்லும் போது போனை ஆப் செய்து விடலாம். கழிவறை செல்லும் […]
அந்த நிலை இருந்தால் செய்யலாம். கர்ப்பமாவதால் உயிருக்கு ஆபத்து இருந்தால் கர்ப்பத்தடை ஆபரேசன் செய்யலாம். நிரந்தரமாக கற்பத் தடை செய்து கொள்வது மார்க்கம் தடை செய்த ஒன்றாகும். நிர்பந்தம் ஏற்படும் போது தடுக்கப்பட்ட விஷயங்கள் ஆகுமானதாகி விடும். இனி கரு உருவானால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் இது நிர்பந்தமான நிலை தான். நிர்பந்தமான நிலை ஏற்படும் போது மார்க்கத்தின் சட்ட திட்டங்கள் குறுக்கே நிற்காது. நமது உயிரைக் காப்பதற்குரிய வழி என்னவோ அதைக் கையாள வேண்டும் என்றே மார்க்கம் கூறுகின்றது. நிர்ப்பந்தத்தில் இறை நிராகரிப்பு கூட மன்னிக்கப்பட்டு விடுகின்றது. அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் […]
அரவாணிகளாக இருப்பவர்கள் ஆண்களுக்குரிய சட்டத்தின் அடிப்படையில் வாழ வேண்டும். இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது. ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். ஆண்களைப் போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவர்களின் உணர்வுகள் குணாதிசங்கள் நடத்தைகள் ஆகியவை அனைத்தும் பெண்களைப் போன்று அமைந்திருக்கும். அதாவது உடல் தோற்றத்தைக் கவனித்தால் இவர்கள் ஆண்களாகவும் குணாதிசியங்களைக் கவனித்தால் இவர்கள் பெண்களாகவும் இருக்கின்றனர். இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். இந்தப் பாதிப்பு மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில நேரங்களில் இது போன்ற […]
வேறு கிரகங்களில் உயிரினங்கள் உண்டு. பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதன் வாழ முடியாது என்று திருக்குர்ஆன் கூறுவது 175வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிரிணங்கள் வாழ முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது முழுமையாக நிரூபிக்கப்படாவிட்டாலும் சில கோள்களில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதே இதற்குக் காரணம். திருக்குர்ஆன் இந்தச் சாத்தியத்தை மறுக்கவில்லை. மாறாக வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது. இவ்வசனம் 42:29 வானத்திலும் பூமியிலும் உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதாகக் கூறுகிறது. பூமியைத் தவிர மற்ற கோள்களில் அல்லது துணைக் கோள்களில் நிச்சயம் உயிரினம் இருக்கின்றன என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் அடித்துச் […]
வட்டி வாங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளதைப் போன்று வட்டி கொடுப்பதையும் தடுத்துள்ளார்கள். வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி). நூல்: முஸ்லிம் (3258) எனவே வங்கியில் லோன் வாங்கி வட்டி செலுத்துவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. படிப்பு வகைக்காகவும் இவ்வாறு செய்வது கூடாது. வங்கியிலிருந்து கடன் தொகையை வாங்கிக் கொண்டு வட்டி செலுத்தாமலிருக்க ஏதேனும் வழி இருந்தால் அந்த வழியைக் கடைப்பிடிக்கலாம்.
நம்முடைய வருமானத்தில் குறிப்பிட்ட அளவு நாட்டுக்கு வரி செலுத்த வேண்டும் என்று நம் நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது இஸ்லாம் விதித்த விதிமுறையல்ல. இந்த வரியைக் கொடுக்க வேண்டும் என்றோ கொடுக்கக் கூடாது என்றோ இஸ்லாம் கூறவில்லை. ஒருவர் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியைச் செலுத்தாவிட்டால் இதன் காரணத்தால் அவருடைய செல்வம் ஹராமான செல்வமாகி விடாது. ஆனால் உலக ரீதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அவரே பொறுப்பாளியாவார். இதனால் அவருக்கு ஏற்படும் சிக்கல்களை அவரே எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் சம்பாதிக்கும் செல்வங்களுக்கு ஸகாத் என்ற ஏழை வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இந்த வரியைச் செலுத்தினால் தான் நமது சம்பாத்தியம் ஆகுமானதாகும். […]
இந்தக் கம்பெனியில் நாம் சேர்ந்தால் நம்முடைய பங்கு ஹலாலான தொழிலில் இடப்பட்டுள்ளதா? அல்லத ஹராமான தொழிலில் இடப்பட்டுள்ளதா? என்பது தெரியாது. ஆகுமான தொழில் என்று உறுதியாகத் தெரியாத வரை அதில் நாம் முதலீடு செய்வது கூடாது. ஷேர் மார்க்கெட் என்பது ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 1 கோடி மதிப்புள்ள தொழிலில் 30 லட்சம் ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிப்பார். ஒரு பங்கு என்பது 10 ரூபாயக்கு மேல் தாண்டக் கூடாது என்பது தான் சட்ட விதிமுறை. எனவே இந்த 10 ரூபாய் உள்ள ஒரு பங்கை 100 பங்காக சேர்த்து முதல் தடவையாக அதை 1000 ரூபாய் மதிப்பாக […]
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் இந்த வழிகாட்டலைக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்த உலக அறிவை அடிப்படையாக வைத்தே இவ்வாறு கூறியுள்ளார்கள். ஒட்டகத்தின் பாலிலும் சிறுநீரிலும் மருத்துவ குணம் இருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதைவிடச் சிறந்த மருத்துவ முறை கண்டறியப்பட்டால் அதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால் நபிவழியை நாம் மீறியவர்களாக மாட்டோம். மருத்துவத்துக்காக ஒட்டகத்தின் பாலையும் அதன் சிறுநீரையும் பருகுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வரும் செய்தி கூறுகின்றது. 233حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي […]
சரி வராது. திரைப்படங்கள் எடுத்து தங்கள் மதத்தைக் கொண்டு செல்ல முயன்றவர்களால் அதில் முழு வெற்றி பெற முடியவில்லை. இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து தங்கள் ஒரிஜினாலிட்டியை தாங்களே அழித்து விட்டனர். ஆனால் 1400 ஆண்டுகளாக உருவப்படம் இல்லாமல் சிலை இல்லாமல் நாடகம் சினிமா இல்லாமல் நபிகள் நாயகம் குறித்த செய்திகள் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்து கொண்டு தான் உள்ளது. தனது சமரசம் செய்து கொள்ளாத கொள்கை மூலம் இம்மார்க்கம் அதன் தூய வடிவில் சென்று கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற திரைப்படங்கள் இல்லாமல் தான் இந்த மார்க்கம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றவுடன் சிவாஜி கனேசனின் தோற்றம் […]
கண் தானம் செய்யலாம். ஒருவர் தன்னுடைய கண்களை தானம் செய்கின்றார் என்றால் இதன் மூலம் கண் தெரியாத இரண்டு பேருக்குப் பார்வை அளிக்கின்றார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) என்ற வசனத்தின் அடிப்படையில் கண் தானம் என்பது நன்மையைப் பெற்றுத் தரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. உடல் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. கண் தானத்தின் […]
காது குத்தக் கூடாது. காதுகளைக் குத்தி ஓட்டை போடுவது அல்லாஹ்வின் படைப்பில் மாறு செய்வது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்களைப் படைக்கும் போது காதுகளில் ஓட்டை போட அல்லாஹ் மறந்து விட்டது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இதை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான். “அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் ஷைத்தான் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். (அல்குர்ஆன் 4 : 119) இந்த வசனத்தை நன்கு சிந்தித்தால் இது […]
தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன. ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி). நூல்: புகாரி 1364 யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் […]
இல்லை. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் “ஜின் என்ற படைப்பினம் உள்ளது; அது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்டது; மனிதர்களை விட சக்தி வாய்ந்தது” என்றெல்லாம் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். ஆனால் அந்த ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. ஒரு மனிதனின் உடம்பில் ஜின் இருக்கின்றது என்றால் அந்த மனிதனுக்கு மனித உள்ளம், ஜின் உள்ளம் என்று இரண்டு உள்ளங்கள் இருப்பதாக ஆகின்றது. ஆனால் இவ்வாறு இரண்டு உள்ளங்கள் யாருக்கும் இருக்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 33:4) மனிதனிடம் இரண்டு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை […]
திக்ரு ஆக சொல்லும்போது சப்தமில்லாமலும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சொல்லும்போது தேவைக்கேற்ப விரும்பியவாரும் சொல்லலாம். “என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மேல் ஆணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நாங்கள் “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்று கூறினோம். உடனே அவர்கள், “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்கள். நாங்கள், “அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அவர்கள், “சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள், “அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். […]
-பாத்திமா ஜவாஹிரா, காயல்பட்டிணம் ஒரு முஸ்லிம் யாருடைய துணையுமின்றி வெளியூர்ப் பயணம் செல்லக் கூடாது. இரண்டு நபர்களாகவும் பிரயாணம் செய்யக் கூடாது. குறைந்த பட்சம் மூன்று நபர்கள் இருந்தால் தான் பிரயாணம் செய்ய அனுமதி உண்டு என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர். سنن الترمذى – مكنز (6/ 440، بترقيم الشاملة آليا) حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِىُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ […]