Category: -10 நிமிட உரைகள்
அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! கோடான கோடி செல்வம் இருந்தாலும், இறைவன் அதில் பரக்கத்தை நீக்கி விட்டால் அந்த செல்வத்தைக் கொண்டு எதனையும் சாதிக்க இயலாது. மிகக் குறைவான் செல்வம் இருந்தாலும் அதில் இறைவனது பரக்கத் இருந்தால் அது கோடி ரூபாய் செய்யும் வேலையை சுலபமாக செய்துவிடும். இதுவே மறைமுகமான அபிவிருத்தியாகும். இந்த மறைமுகமான அபிவிருத்தியாக இருக்கிற பரக்கத்தைப் பற்றியும், அதனை பெறுவதைப் பற்றியும் இந்த சிறிய உரையிலே நாம் பார்க்க இருக்கிறோம். விரலை சூப்புதல் முஸ்லிம்களில் சிலர் நவீன கலாச்சாரம் என்றபெயரில் ஹோட்டல்களில் சாப்பிடும்போது கைவிரல்களை சூப்பி சாப்பிடுவதில்லை. காரணம் பிறமதத்த வர்கள் அங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று ஒன்றுக்கும் ஒவ்வாத காரணத்தை சொல்லி […]
பெண் என்றால் இப்படித் தான் பெண்’ – இந்தச் சொல்லுக்கு எத்தனையோ விதமான பொருள்கள் நடைமுறையில் வழங்கப்படுகின்றது. அமைதியின் பிறப்பிடம்; அன்பின் உறைவிடம்; சகிப்புத் தன் மையின் உச்சக்கட்டம்; இன்னும் இதுபோன்று பல விளக் கங்களுக்கு அந்த ஒற்றை வார்த்தை இலக்காகிறது. ஆனால் நடைமுறை வாழ்வில் மேற்கண்ட விளக்கங்களில் ஒன்று கூடப் பொருந்தாத நிலையில்தான் நிகழ்காலப் பெண்களின் வாழ்க் கைத் தரம் அமைந்துள்ளது. இத்தகையவர்களை மனைவிகளாக பெற்ற கணவர்கள், அவர்களின் தவறுகளை மன்னித்து, மனைவியிடம் நல்ல முறையில் நடக்க வேண்டும். சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் சண்டையிட்டால், இறுதி மணவிலக்கு தான். விலா எலும்பைப் போன்றவள் பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ […]
தவறு இல்லாதவர் யார்? மனிதன் இவ்வுலகத்தில் படைக்கப்பட்ட போதே அவன் தவறு செய்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். ஆதமின் மக்கள் அனைவரும் பகலிலும் இரவிலும் தவறிழைக்கின்றனர் என்பது நபிமொழி. (நூல்: அஹ்மத் 20451) மனிதன் தவறு செய்பவனாகப் படைக்கப்பட்டுள்ளதால், மனிதர்களிடம் ஏற்படும் தவறுகளை மன்னிக்கும் பண்பு அனைவரிடமும் இருக்க வேண்டும். அமல்கள் சமர்பிக்கப்படும் நாள் ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் (நாம் செய்த) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படும். அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு மனிதனின் தவறுகளையும் அந்நாளில் அல்லாஹ் மன்னிப்பான். தன் சகோதரனுக்கிடையில் சண்டையிட்டுள்ள ஒருவனைத் தவிர! அவர்கள் இருவரும் சமாதானம் செய்து கொள்ளும் வரை அவனை விட்டு விடுங்கள் என்று கூறப்படும். (நபிமொழி, […]
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எவ்வளவு சிறிதாயினும் காண்பார் இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் என்று இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது. அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8) அதிசய பதிவேடு பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே! எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் […]
நாம் மறுமைக்காக வாழும் சமுதாயம் ஆடம்பர வாழ்க்கையில் ஆட்பட்டு கிடக்கும் இன்றைய சூழலில் பொருளாதராத்தை ஈட்ட வேண்டிய நிர்பந்தத்தில் அனைத்து மக்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய மக்களின் நிலையோ இதில் சற்று மாறுபட்டு உள்ளது. பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்த கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தங்கள் வாழ்க்கை மேம்படுத்த கடுமையாக உழைக்கிறார்கள். இதை யாரும் குறை சொல்ல முடியாது. அதே நேரத்தில் இவ்வுலுக வாழ்க்கையைவிட மேலான ஒரு வாழ்க்கைக்காக எவ்வளவு நேரம் ஒதுக்கி உள்ளார்கள் என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மறுமை வாழ்க்கையோடு ஒப்பிடும்போது இவ்வுலுக வாழ்க்கை ஒன்றுமே […]
முதல் நட்பு உறவு என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கு எந்த உறவு இருக்கிறதோ இல்லையோ நட்பு என்ற உறவு அனைவருக்கும் இருக்கும். இது ஒரு வித்தியாசமான உறவு. நம் மீது ஒரு வித அன்பு வைத்துப் பழகி, நம் இன்ப துன்பங்களை பங்கிட்டுக் கொள்ளும். இளமை முதல் முதுமை வரை பல கோணங்களில் இந்த நட்பு வரும். இந்த நட்பின் மூலம் பல உதவிகள் பெற்று முன்னேறியவர்கள் பலர். பொதுவாகத் தாய் தந்தை, அண்ணன் தம்பி, அக்கா தங்கை என அனைத்துமே நாம் எதிர்பாராத வித்தியாசமான கோணங்கள் கொண்ட உறவாகும். இதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நட்பு என்ற உறவை நாமே நம் […]
அழைப்புப் பணியே அழகிய பணி! அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? அல்குர்ஆன் 41:33 அழைப்புப் பணியை, சிறப்பு மிக்க பணி என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். அல்குர்ஆன்: 110வது அத்தியாயம் இந்த அத்தியாயம் குறிப்பிடுவது போன்று இன்று அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் தவ்ஹீது கிளைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் […]
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! வட்டி, விபச்சாரம், கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் மிக பாரதூரமானவை என்று விளங்கியுள்ள இந்த முஸ்லிம் சமுதாயம், பிறருடைய மானம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கிறோம். ஆனால் அது மறுமையில் மிகப் பெரிய பாவமாக வந்து நிற்கும் என்று இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது. நபியின் இறுதிப் பேருரையில்…. இறுதி ஹஜ் பேருரையில் எச்சரித்த செய்தி “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் […]
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக, எனது உரையை ஆரம்பம் செய்கிறேன். உயிரினும் மேலான உத்தம நபி ஓர் இறை நம்பிக்கையாளர் எனப்படுபவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருக்க வேண்டிய உறவு சாதாரண தொண்டன், தன்னுடைய அரசியல் கட்சித் தலைவர் மீது கொண்டிருக்கும் உறவைப் போன்றதல்ல! அவனது தாய், தந்தையர், மனைவி மக்கள் மற்றும் உலக மக்களில் யார் மீது கொண்டிருக்கும் உறவு, அன்பு, பாசத்தை விடவும் நபி (ஸல்) அவர்கள் மீது கொள்ள வேண்டிய அன்பு அழுத்தமான ஒன்றாக இருக்க வேண்டும். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்லிக் […]
எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அன்று. மாறாக, இஸ்லாத்தின் பகுத்தறிப்பூர்வமான கடவுள் கொள்கை, மனிதர்கள் அனைவரும் சமம், மதகுரு என்ற ஒன்று இல்லாமை என மாற்றுமத மக்களும் ஒப்புக் கொள்ளும் பல்வேறு சிறப்பம்சங்களின் காரணமாகவே இஸ்லாம் அபார வளர்ச்சியடைந்தது, இன்றைக்கும் வளர்ச்சி அடைகிறது . நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாம் தாறுமாறாக பரவியதற்கு மிக முக்கிய காரணம், அவர்களிடத்தில் இருந்த நளினமும், அடக்கமும், மன்னிப்புமேயன்றி வோறொன்றுமின்லை. சுமாமாவை ஈர்த்த இஸ்லாம் நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த சுமாமா […]
தவறுகளுக்காக பாவமன்னிப்பு தேடுவோம்! அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஸலாத்தும், ஸலாமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! ஒவ்வொரு நாளும் பாவத்திலேயே மூழ்கிய இருக்கும் நாம் மறுமையில் இதன் காரணத்தால் நாசமைந்து விடுவோம் என்ற அச்சம் இன்றி வாழ்ந்து வருகிறோம். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்பட்டது என்பதற்காக இறைவனிடத்தில் பாவமன்னிப்பு தேடினார்கள். அதற்காக வருத்தப்பட்டார்கள். ஏன்? இவ்வுலகம் தான் மன்னிப்பு கேட்பதற்குரிய இடம். மறுமை கூலி தரப்படுகிற இடம்! கவனக்குறைவிற்காக நபியவர்கள்….. “எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக […]
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இறைவனை நம்பிக்கை கொண்டு விட்டால் மாத்திரம் போதாது. நற்செயல்களை போட்டி போட்டு செய்வதன் மூலமும் தான் சுவனத்திற்குள் இலகுவாக நுழைய முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அந்த அடிப்படையில் பல்வேறு சின்னஞ்சிறு அமல்களில் பென்னம் பெரும் நன்மைகளை இஸ்லாம் வைத்துள்ளது. உதாரணமாக, நல்ல வார்த்தைகளைப் பேசுதல் தேவையற்ற பேச்சுக்களைப் பேசாமல் நல்ல வார்த்தைகளைப் பேசுவதால் அதிக நன்மையை அடைய முடியும். நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6023 மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல் மற்றவருக்காக நாம் துஆச் செய்தால் அதற்காக அதிக […]
மீஸான் தராசை நிரப்புவோம்! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி இறைவனின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். இறைவனின் அருள் மழையின் காரணமாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். மறுமை நாளில் நாம் ஒவ்வொரு நம் நன்மை தீமையின் எடைகளுக்கு தகுந்தவாறு தான் சுவனமோ, நரகமோ செல்லமுடியும். இதனை திருமறைக் குர்ஆன் தெள்ளத் தெளிவாக நமக்கு சொல்லித் தருகிறது. எடை போடப்படும் وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ […]
சத்தியத்தை உரக்கச் சொல்வோம்! அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக வருபவர்களுடன் போர் புரிவது மட்டுமே ஜிஹாத் என்று பெரும்பாலான மக்கள் விளங்கி இருப்பதனால் தான் ஆளாளுக்கு வாள் ஏந்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் வாள் ஏந்துவதை ஜிஹாத் என்று குறிப்பிடுவதைப் போல நியாயத்திற்காக நாவினால் குரல் கொடுத்தலும் ஜிஹாத் என்றே கூறுகிறது. ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : தாரிக் பின் […]
அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும். சக கொள்கைவாதிக்கு, மனிதனுக்கு நன்மையைக் கருத வேண்டும். அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால், இன்றைக்கு தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம் என்ற பெயரில், தவறு செய்தவரை கடித்துக் குதறி விடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. தவறுகளை சுட்டிக் காட்டும் போது மென்மையை கையாண்டால் சம்பந்தப்பட்டவர் அவர் செய்த தவறை ஒத்துக் கொள்வார். அதை எண்ணி வருந்துவார். இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் […]
தொழுகையை சரிப் படுத்துவோம்! கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! ஸலாத்தும், ஸலாமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! முதல் கேள்வியே தொழுகை தான். இறைவன் நம் மீது கடமையாக்கி இருக்கிற அமல்களில் மிகமிக முக்கியமானது ஒரு அமல் தொழுகை. இந்த கடமையில் நாம் அனைவரும் நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இந்த நேரம். ஏனெனில், அல்லாஹ், இறந்தவர்கள் அனைவரையும் மறுமை நாளில் எழுப்பி விசாரணை செய்வான். முதன் முதலில் அவன் தொழுகையைப் பற்றித் தான் விசாரிப்பான். இதற்கடுத்து தான் மற்றவைகளைப் பற்றி கேள்வி கேட்பான். இறைவன் கேட்கும் முதல் கேள்விக்கு […]
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! சத்திய இஸ்லாமை நாம் பிறருக்கு எடுத்துச் சொல்ல முனைந்தால், பல்வேறு சோதனைகளை சந்திக்க நேரிடும். சமுதாயத்தில் தலைவர்களாக இருப்பவர்கள், செல்வாக்கு படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள் தான் முதலில் நம்மை எதிர்ப்பார்கள் நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். “நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்” (என்று அவர் கூறினார்.) அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்). “எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்” […]
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இஸ்லாம் மிகவும் எளிமையான மார்க்கமாகும். அகில உலக அருள் பாலிப்பவன், படைப்பினங்களின் இரட்சகன் அல்லாஹ்வால் அருளப்பட்ட மார்க்கமாகும் அது அல்குர்ஆனையும் அதன் விளக்கவுரையாக அமைந்த அல்லாஹ்வின் திருத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றையும் நெறிமுறையாகக் கொண்டு செயல்படுத்தும் மார்க்கமாகும் “நான் கடவுளை வழிபாடு செய்கிறேன்; ஆராதனை செய்கிறேன்” என்று ஒரு மனிதன் தன் விருப்பப்படி எதையும் செய்திட முடியாது. அதைப் போன்றே மார்க்கம் சொல்லும் காரியத்தையே ஒரு மனிதன் தன்னை வருத்திக் கொண்டோ தனக்கோ அல்லது பிறருக்கோ இடர் தரும் என்பதைத் தெரிந்து கொண்டே செய்தால் அதையும் தீமையான செயலாகவே கருதுகிறது. காரணம் இஸ்லாம் சிரமத்தைப் […]
இஸ்லாத்தை அழிக்க இயலாது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! இன்றைக்கு உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமே ஏராளமான சூழ்ச்சிகள் செய்யப்படுகின்றன. முஸ்லிம்கள் மட்டுமே குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். எனினும், அல்லாஹ் இஸ்லாம் எனும் இந்த ஜோதியை ஒருகாலும் யாராலும் அழிக்க முடியாது என்று சூழுரைக்கிறான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்கு பூமியைச் சுருட்டிக் காண்பித்தான். அதில் சூரியன் உதிக்குமிடங்களையும் அது மறையுமிடங்களையும் கண்டேன். என்னிடம் சுருட்டிக் காட்டப்பட்ட அந்தப் பகுதிகளை எனது சமுதாயத்தின் ஆட்சி சென்றடையும். நான் தங்கம், வெள்ளிச் சுரங்கங்கள் வழங்கப்பட்டிருந்தேன். (இதைக் கண்ட பின்) “எனது சமுதாயத்தைப் பெரும் பஞ்சத்தின் மூலம் அழித்து விடாதே! என் சமுதாய […]
ஏன் இந்த பகுதி? 10 நிமிட உரைகள் பகுதி மிகவும் பயனுள்ளது. பெரும்பாலும் 1 மணி நேர, 2 மணி நேர உரைகள் என்றால், பேச்சாளாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். எனவே, குறிப்புகளை தேடி எடுத்து, தொகுக்க நேரம் கிடைக்கும். ஆனால், 10 நிமிட உரை என்பது, எதாவது சபையில் இருக்கும் போது தீடீரென தரப்படும். பல வருடங்கள் அனுபவம் இருப்பினும், பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில் இருக்கும் போது, எதை பேசுவதென்று நினைவிற்கு வராது. எனவே தான், இந்த 10 நிமிட உரைகள் பகுதியை ஏற்படுத்தியுள்ளேன். இதில் 10 அல்லது 15 நமிடம் மட்டுமே பேசத் தேவையான குறைவான குறிப்புகள் இருக்கும். இறையச்சம், தொழுகை, ஈமான், உறுதி […]