Search Posts

Category: 10-இதர வணக்கங்கள்

q117

ஒரு நாளைக்கு ஆயிரம் ரக்அத்கள் தொழமுடியுமா?

எஸ்.ஏ. அமீர் அலீ, கிள்ளை. ! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து கேட்டனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள், நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு, “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?” என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், “நான் என்ன செய்யப் போகின்றேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்” என்றார். இன்னொருவர், “நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகின்றேன்” என்றார். […]

இரவு முழுதும் வணங்கலாமா?

திருக்குர்ஆனில் ஒரு வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமையும். இந்த வசனத்தில் இரவைக் கழிப்பார்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டிருந்தாலும் இதே கருத்தில் இடம் பெற்றுள்ள வேறு சில வசனங்கள் இரவின் ஒரு பகுதியில் நின்று வணங்குவதைப் பற்றியே குறிப்பிடுகின்றன. (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.) அல்குர்ஆன் 3:17 இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். அல்குர்ஆன் 51:18 இந்த வசனங்களும் நல்லடியார்களைப் பற்றியே கூறுவதால் 26:64 வசனத்திற்கு இவை விளக்கமாக அமைந்துள்ளன. இந்த வசனங்களில் இரவு முழுவதும் வணங்குமாறு இறைவன் கூறவில்லை. இரவின் ஒரு பகுதியில், குறிப்பாக இரவின் […]

ஸலாத்துந் நாரிய்யா 4444 தடவை ஓதினால் நினைத்தது நடக்குமா?

ஸலாத்துந் நாரிய்யா என்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத் அல்ல. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லுமாறு இறைக் கட்டளை இறங்கியவுடன் நபித்தோழர்கள் தாங்களாக இது போன்ற ஸலவாத்துக்களை உருவாக்கிக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களிடம் சென்று ஸலாவத்தைக் கற்றுத் தருமாறு கேட்டதை நாம் ஹதீஸ்களில் காண முடிகின்றது. நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், […]

குர்ஆன் மொழிபெயர்ப்பு படிப்பதற்கு நன்மை உண்டா?

திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம். இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இந்த நன்மையை மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் போது கிடைக்காது. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى قَال سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ الْقُرَظِيَّ قَال سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ […]

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?

மய்யித்தை அடக்கம் செய்தபின் இறந்தவரின் வீட்டிற்கு முன்னால் அணிவகுத்து நின்று ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து கைகொடுத்துக் கொள்ளும் வழக்கம் சில முஸ்லிம் ஊர்களில் காணப்படுகிறது. ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளாதவர்கள் கூட கட்டாயம் இதில் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சிக்கு வராதவர்கள் இறந்தவருக்கு மிகப்பெரும் எதிரி போல் சில ஊர்களில் கருதப்படுகின்றனர். ஒரு முஸ்லிம் சகோதரர் மரணித்துவிட்டால் அவருக்காக ஜனாசா தொழுகையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்வது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாக நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். (பார்க்க புகாரி 1240) ஆனால் அடக்கம் செய்தபின் இறந்தவரின் வீட்டிற்கு முன்னால் அணிவகுத்து நின்று ஒருவருக்கொருவர் கைகொடுத்து ஸலாம் சொல்லிக் கொள்வதும். ஸலவாத் ஓதிக் […]

பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்ல்லாமா?

திருக்குர்ஆனைத் துவக்குவ்தற்கு அல்லாஹ் கற்றுத்தந்த படி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறினாலும் அதுவும் சரிதான். பிஸ்மில்லாஹ் என்று மட்டும் கூறினாலும் சரிதான். முதல் சொற்றொடரில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதுடன் அவனது இரண்டு பண்புகளையும் சேர்த்துக் கூறி புகழ்வதும் அடங்கியுள்ளது. இரண்டாவது சொற்றொடரில் அல்லாஹ்வின் பெயரைக் கூறி துவங்குதல் மட்டும் உள்ளது. 5376 حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ أَخْبَرَنَا سُفْيَانُ قَالَ الْوَلِيدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنِي أَنَّهُ سَمِعَ وَهْبَ بْنَ كَيْسَانَ أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ يَقُولُ كُنْتُ غُلَامًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ يَدِي تَطِيشُ […]

காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா?

காலையிலும் மாலையிலும் நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னால் நபியவர்களின்பரிந்துரை கிடைக்கும் என்ற கருத்தில் எந்தச் செய்தியும் இல்லை. ஒவ்வொரு பாங்கிற்குப் பிறகும் நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும். இதற்குப்பிறகு நபியவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால்நபியவர்களின் பரிந்துரை கிடைக்கும் என்று பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்தெரிவிக்கின்றது. 577حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ وَسَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ […]

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத சொல்ல வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின் சிறப்பை விவரித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. ஆனால் ஸலவாத்துச் சொன்னால் மறந்த விஷயம் நினைவுக்கு வந்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நாம் பார்க்கவில்லை. யார் உங்களிடம் இதைக் கூறினார்களோ அவர்களிடம் இதற்கு ஆதாரத்தைக் கேளுங்கள்.

இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை?

அல்முல்கு மற்றும் அஸ்ஸஜ்தா அத்தியாயங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தையும் அஸ்ஸஜ்தா என்ற 32 வது அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹாகிம் அஸ்ஸுனனுல் குப்ரா மற்றும் ஷுஃபுல் ஈமான் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : السنن الكبرى للنسائي – كتاب عمل اليوم والليلة ذكر ما يستحب للإنسان أن يقرأ كل ليلة قبل أن ينام – حديث : ‏10140‏ أخبرنا أبو داود ، قال : حدثنا الحسن ، […]

இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையா?

ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ – இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல இது வெளியேறுவதால் குளிப்புக் கடமையாகாது. இச்சை நீர் வெளிப்பட்டால் ஆணுறுப்பை கழுவிட்டு உளூ செய்துகொள்ள வேண்டும். 132 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ عَنْ الْأَعْمَشِ عَنْ مُنْذِرٍ الْثَّوْرِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ فَقَالَ فِيهِ الْوُضُوءُ رواه البخاري […]

உளு நீங்குவது போல உணர்ந்தால்?

உளூ முறியாமலேயே உளூ முறிந்துவிட்டது போன்று ஊசலாட்டம் பலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ஊசலாட்டம் ஷைத்தானால் ஏற்படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உளூ முறிந்துவிட்டது என நமக்கு உறுதியாகத் தெரிந்தாலே மீண்டும் நாம் உளூ செய்ய வேண்டும். காற்றுப்பிரிந்த சப்தத்தை நாம் கேட்டால் அல்லது துர்நாற்றத்தை நுகர்ந்தால் உளூ முறிந்துவிட்டது என்று முடிவு செய்யலாம். இதுபோன்ற சான்றுகள் ஏதும் இல்லாமல் உளூ முறிந்தது போன்ற எண்ணம் உள்ளத்தில் எழுந்தால் இந்த சந்தேகத்தை நாம் பொருட்படுத்தக்கூடாது. உளூவுடன் இருப்பதாகவே முடிவு செய்துகொள்ள வேண்டும். 137 حَدَّثَنَا عَلِيٌّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ح وَعَنْ عَبَّادِ بْنِ […]

கூட்டு துஆ கூடாது?

192.உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல் 180.இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தனை செய்தல் உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான் (திருக்குர்ஆன் 7:55 உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர் (திருக்குர்ஆன் 7:205 இவ்வசனம் (திருக்குர்ஆன் 7:55) இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையைக் கற்றுத் தருகிறது. ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் […]

கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா?

கண்களை மூடிக்கொண்டு துஆச் செய்யும் போது உள்ளச்சம் ஏற்படுகிறது. ஆனால் மாற்று மதத்தினரின் வழக்கமாக இது உள்ளதால் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) இந்த வசனத்தில் பிரார்த்தனை செய்யும் ஒழுங்கைப் பற்றி இறைவன் கூறும் போது, பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுகின்றான். கண்களை மூடிக் கொண்டால் தான் உங்களால் இந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியும் என்றால் அதைச் செய்வதில் தவறில்லை. நமக்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்களை மாற்று மதத்தவர்கள் செய்வது பற்றி நாம் கவலைப்படத் […]

ஸலவாத் எப்படி கூறுவது?

தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம். பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது حدثنا يعقوب حدثنا أبي عن ابن إسحاق قال وحدثني في الصلاة على رسول الله صلى الله عليه وسلم إذا المرء المسلم صلى عليه في صلاته محمد بن إبراهيم بن الحارث التيمي عن محمد بن عبد الله بن زيد بن عبد ربه الأنصاري أخي […]

இரண்டு வயது குழந்தைக்கு ஹகீகா கொடுக்கலாமா?

ஏழாம் நாள் தான் கொடுக்க வேண்டும். அது கடந்து விட்டால் கொடுக்க முடியாது. இது குறித்து முழு விபரம் அறிய ஏற்கனவே அளிக்கப்பட்ட பின்வரும் பதிலைக் காணவும். அகீகா எப்போது கொடுப்பது

கூட்டு குர்பானியில் சமமாக பணம் போட வேண்டுமா?

ஏழு பேர் கூட்டாக ஒரு மாட்டைக் குர்பனி கொடுக்கும் போது சமமாக முதல் இட வேண்டும் என்றோ அவரவர் வசதிக்கேற்ப பங்கெடுக்க வேண்டும் என்றோ நேரடியாக ஹதீஸில் கூறப்படவில்லை. நேரடியாக அவ்வாறு கூறப்படாவிட்டாலும் அதன் பொருள் அனைவரும் சமமாக பங்கெடுக்க வேண்டும் என்பது தான். ஏழாயிரம் மதிப்புடைய மாட்டில் ஒருவர் 500 ரூபாய் மட்டும் கொடுத்தால அவர் ஏழில் ஒரு பங்கு கொடுத்த்வராக மாட்டார். பதினான்கில் ஒரு பங்கு கொடுத்தவராகத் தான் ஆவார். ஒவ்வொருவரும் சமமாகக் கொடுத்தால் தான் ஒவ்வொருவரும் ஏழில் ஒரு பங்கு கொடுத்தவராக முடியும். அதே சமயம் ஆறு பேர் சேர்ந்து ஒரு மாட்டை வாங்கி அதில் ஒரு பங்கை மனமுவந்து இன்னொருவருக்காக […]

எவ்வாறு துஆ கேட்பது?

நீங்கள் குறிப்பிட்ட மன்ஸில் என்ற கிதாப் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தொகுக்கப்பட்ட புத்தகம் அல்ல. எந்த ஆதாரமும் இல்லாமல் அல்லது பல தவறான செய்திகளை அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்ட நூல். எனவே அதனடிப்படையில் உங்களுடைய வணக்கத்தை நீங்கள் அமைத்துக் கொள்ள வேண்டாம். குறிப்பிட்ட சூராக்களை ஓதினால் துஆவில் பலன் கிடைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தூங்கும் முன் 67வது சூரா ஓதலாமா?

நபி (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தை ஓதாமல் உறங்கமாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹாகிம் அஸ்ஸுனனுல் குப்ரா மற்றும் ஷுஃபுல் ஈமான் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது السنن الكبرى للنسائي – كتاب عمل اليوم والليلة ذكر ما يستحب للإنسان أن يقرأ كل ليلة قبل أن ينام – حديث : ‏10140‏ أخبرنا أبو داود ، قال : حدثنا الحسن ، قال : حدثنا زهير ، قال : سألت أبا الزبير : أسمعت جابرا يذكر أن نبي […]

சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா?

பொதுவாக எப்போது பிரார்த்தனை செய்தாலும் முதலில் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலாவாத்துக் கூற வேண்டும். இதன் பிறகே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சிலர் கூறிவருகிறார்கள். இதற்கு திர்மிதி அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது போல் அனைத்து பிராத்தனைகளிலும் இந்த ஒழுங்கு முறை பேணப்பட வேண்டும் என அந்த ஹதீஸ் கூறவில்லை. மாறாக அந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைக்கு மட்டுமே இந்த ஒழுங்கு முறையைக் கடைபிடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை அறியலாம். 1266حَدَّثَنَا أَحْمَدُ […]

இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன்வழங்குவதாக வாக்களித்த பின் அவனிடம் அதையே வேண்டுவது தேவையற்றது என்று மேலோட்டமாகப் பார்க்கும் போது தோன்றலாம். ஆனால் பிரார்த்தனை செய்வதில் தேவைகளை கோருவது மட்டுமே நோக்கம் இல்லை. வேறு பல நோக்கங்களும் அதனுள் அடங்கியுள்ளன. இறைவன் வாக்களித்ததையே நாம் கேட்டாலும் இறைவன் வாக்கு மாற மாட்டான் என்று புகழ்பாடுதல் அதனுள் அடங்கியுள்ளது. அவன் வாக்களித்ததை நிறைவேற்ற மறுத்து விட்டாலும் அவனை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவனாக அதை நிறைவேற்றினால் தவிர யாரும் கட்டுப்படுத்த முடியாது. நீ வாக்களித்து விட்டாய். அதை தருவதைத் தவிர வேறு வழி இறைவனுக்கு இல்லை என்று நினைக்காமல் அவனாக பெருந்தன்மையுடன் நிறைவேற்றினால் தவிர அவனை யாரும் […]

தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாமா?

198 حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ قَالَ دَخَلْتُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا وَرَجُلَانِ رَجُلٌ مِنَّا وَرَجُلٌ مِنْ بَنِي أَسَدٍ أَحْسَبُ فَبَعَثَهُمَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجْهًا وَقَالَ إِنَّكُمَا عِلْجَانِ فَعَالِجَا عَنْ دِينِكُمَا ثُمَّ قَامَ فَدَخَلَ الْمَخْرَجَ ثُمَّ خَرَجَ فَدَعَا بِمَاءٍ فَأَخَذَ مِنْهُ حَفْنَةً فَتَمَسَّحَ بِهَا ثُمَّ جَعَلَ يَقْرَأُ الْقُرْآنَ فَأَنْكَرُوا ذَلِكَ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَخْرُجُ مِنْ الْخَلَاءِ […]

நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவேண்டும்?

நாம் பொது மையவாடிக்குச் சென்றால் கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையைத் தான் நபியின் கப்ருக்குச் சென்றால் கூறிக் கொள்ள வேண்டும். இதற்கு என பிரத்யேகமாக எதையும் கூற வேண்டியதில்லை. “அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அஸ்ஸலாமு அலா அஹ்லிலித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள். (பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள […]

கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா?

குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமை என்று மார்க்கம் கூறவில்லை. இது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட வணக்கமாகும். இவ்வணக்கத்தை நிறைவேற்றியவருக்கு நன்மை உண்டு. இதைச் செய்யாவிட்டால் குற்றம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை உள்ளது. கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3498) வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் இருக்கும்போது மேலும் கடன் பட்டு தன் மீது சுமையை அதிகப்படுத்திக் கொள்வதை […]

தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா?

திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம். இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இந்த நன்மையை மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் போது கிடைக்காது. அல்லாஹ் திருக்குர்ஆனை வழங்கியது பொருள் தெரியாமல் வாசிப்பதற்காக அல்ல. மாறாக அதை விளங்குவதற்கும் சிந்திப்பதற்கும் தான் அல்லாஹ் அருளினான். விளங்குவதற்கும் சிந்திப்பதற்கும் அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு பிரச்சனை இல்லை. அரபு மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்ப்புகளை வாசிப்பதன் மூலம் தான் இது சாத்தியமாகும். மொழி பெயர்ப்பை வாசித்து அதைப் புரிந்து கொண்டு சிந்தித்தால் குர் ஆனை […]

எனக்காக துஆ செய்யுங்கள் எனக்கேட்கலா?

இறைவனுடைய இடத்தில் பிறரை வைப்பதே இணைவைப்பாகும். நமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பிறரிடம் கூறும் போது இறைவனுடைய எந்தத் தகுதியையும் அவருக்கு நாம் வழங்கவில்லை. மாறாக நாம் யாரிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறுகிறோமோ அவரும் அல்லாஹ்வின் அடிமை தான் என்ற கருத்து இந்தக் கோரிக்கையில் அடங்கியுள்ளது. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யுமாறு பிறரிடம் கூறுவது தவறல்ல. பிறருக்காக பிரார்த்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ (10) 59 அவர்களுக்குப் […]

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன?

திருக்குர் ஆனில் உள்ள 114 அத்தியாயங்களில் யாஸீன் என்பதும் ஒரு அத்தியாயம் என்பதால் திருக்குர்ஆனுக்கு உள்ள எல்லா சிறப்புகளும் இந்த அத்தியாயத்துக்கும் உண்டு. சில அத்தியாயங்களின் கூடுதல் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளனர். அது போல் யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு பற்றியும் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல. யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு பற்றி பரவலாக பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர். يس قلب القرآن حدثنا قتيبة وسفيان بن وكيع قالا حدثنا حميد بن عبد الرحمن الرؤاسي عن الحسن بن صالح عن هارون أبي محمد […]

குர்ஆனின் சஜ்தா செய்ய வேண்டிய சஜ்தாவுக்குப் பின் சலாம் உண்டா?

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம். இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தா செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14 வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம். ஆனால் இதற்குச் சான்றாக வைக்கப்படும் ஹதீஸ்கள் ஆதாரமற்றதாகும். அப்படியானால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த ஸஜ்தாக்கள் எத்தனை? என்று பார்க்கும் போது, நான்கு வசனங்களை ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக அறிய முடிகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் […]

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா?

இறைவனிடம் பாவமன்னிப்பை வேண்டும் போது நாம் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. நாம் எத்தனையோ பாவங்களைச் செய்துவிட்டு மறந்து விடுகின்றோம். சில பாவங்களை அவை பாவம் என்று உணராமலேயே செய்கின்றோம். ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டுக் கேட்டால் தான் பாவமன்னிப்புக் கிடைக்கும் என்றால் இத்தகைய பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை என்று கூறவேண்டி வரும். எனவே தான் இஸ்லாம் பாவமன்னிப்புக்கு இப்படியொரு நிபந்தனையை இடவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களுக்கு பொதுவாக மன்னிப்பு வேண்டியுள்ளார்கள். 6398 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ صَبَّاحٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي […]

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?

இயற்கைக் கடனை நிறைவேற்றுபவர் கழிப்பிடத்திற்கு வெளியே தான் துஆக்களை கூற வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கழிவறைக்குள் எக்காரியங்களைச் செய்யக்கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விவரித்துள்ளார்கள். கழிப்பிடத்திற்குள் துஆக்களைக் கூறக் கூடாது என்றால் இதையும் நபியவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் இது கூடாது என்று கூறியதாக எந்தச் செய்தியும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தவுடன் துஆ ஓதுவார்கள் என்று புகாரியில் இடம்பெற்ற செய்தி கூறுகின்றது. 6322حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ […]

பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். சுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப் (ரலி) மற்றொரு கூடாரத்தை அமைத்துக் கொண்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு, “இவை என்ன?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது […]

பாரகல்லாஹு என்று கூறுவது சரியா?

ஜஸாகல்லா என்று கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா? முஹம்மத் தரோஜ் பதில் ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதற்காக அவருக்கு நாம் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறலாம். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உள்ளது. இது பற்றி ஏற்கனவே நமது இணையதளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/jazakala_kuruthal/ ஆனால் இதன் பிறகு உதவி செய்தவர் பாரகல்லாஹு கூற வேண்டும் என்ற கருத்து தவறானது. ஏனென்றால் இவ்வாறு கூற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை.

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா?

ஒவ்வொரு மொழியிலும் அம்மொழி எழுத்துக்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என விதி இருக்கும். இந்த விதியைக் கடைபிடித்தால் தான் அம்மொழியைப்பிழையின்றி கையாள முடியும். குர்ஆன் அரபு மொழியில் அமைந்துள்ளது. அரபு வார்த்தைகளை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கு அம்மொழியில் விதி வகுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விதிமுறையைப் பேணி குர்ஆனை ஓதுவது அவசியம். இல்லையென்றால் நாம் பிழையாக ஓத நேரிடும். குர்ஆனை பிழையின்றி திருத்தமாக ஓத வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلْ الْقُرْآنَ تَرْتِيلًا(4)73 குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! அல்குர்ஆன் (73 : 4) அரபு எழுத்துக்களை உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்துவிட்டால் இறைவன் இட்ட இந்தக் கட்டளையை நாம் நிறைவேற்றியவர்களாகி […]

நேர்ச்சையின் பரிகாரம் என்ன

நாம் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாவிட்டால் மார்க்கம் அதற்குரிய பரிகாரத்தை கற்றுத் தந்துள்ளது. நேர்ச்சையை நிறைவேற்றாதவர்கள் இதைத் தான் கடைபிடிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதாக இறைவனிடம் வாக்களித்து விட்டு வேறு காரியத்தை செய்தால் நமது வாக்குறுதியை நிறைவேற்றியவர்களாக மாட்டோம். இதுவும் நேர்ச்சையை முறிக்கும் செயலாகும். எனவே இதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். சத்தியத்தை முறித்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதே பரிகாரத்தை நேர்ச்சையை முறித்தாலும் செய்ய வேண்டும். لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ […]

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா?

நாம் செய்த சத்தியத்தை முறித்தால் மார்க்கம் அதற்குரிய பரிகாரத்தைக் கற்றுத் தந்துள்ளது. சத்தியத்தை முறித்தவர்கள் இதைச் செய்வது அவர்களின் கடமை. لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (89)5 உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான […]

சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா

கப்றில் குர்ஆன் ஓதக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 1300حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنْ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ رواه مسلم அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். “அல்பகரா’ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான். […]

துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன?

கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பலநேரங்களில் இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். 932 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ وَعَنْ يُونُسَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَ الْكُرَاعُ وَهَلَكَ الشَّاءُ فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا فَمَدَّ يَدَيْهِ وَدَعَا رواه البخاري அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) […]

காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா?

அகீகாவுக்கான பிராணிகளுக்கு தனியாக சட்டம் எதுவும் கூறப்படவில்லை. ஆனாலும் குர்பானிப் பிராணிகளுக்கான சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. குர்பானியும் அகீகாவும் அல்லாஹ்வுக்காக செய்யப்படும் வணக்கம் என்பதால் குர்பானிப் பிராணிகளை போல் அகீகா பிராணியும் இருப்பதே சிறந்ததாகும். காயடிக்கப்பட்ட பிராணியை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் காயடிக்கப்பட்ட ஆட்டைக் கொடுப்பதற்கு நம்பத் தகுந்த ஹதீஸ்களில் எந்தத் தடையும் வரவில்லை. ஆட்டிற்குக் காயடிப்பதினால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்குமே தவிர தரம் எந்த விதத்திலும் குறைந்து விடாது. ஆகையால் காயடிக்கப்பட்ட பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம். […]

தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா?

தொழுகை என்பது இறைவனுக்கும், அடியானுக்கும் இடையிலான உரையாடலாகும். இறைவன் எல்லா மொழிகளையும் அறிந்தவன். அவனிடம் எந்த மொழியில் வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். தொழுகையில் நாம் விரும்பிய பிரார்த்தனைகளைச் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி… கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: நஸயீ 1151 ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு மனிதர் தனது தொழுகையில் […]