Search Posts

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: தத்ரீபுர் ராவீ, பாகம் 1, பக்கம் 276

(இமாம் நவவீ அவர்கள்

இமாம் பைஹகீ அவர்களின் கருத்து

இறப்பு ஹிஜ்ரீ 676, சுயூத்தி பிறப்பு 849)

الأسماء والصفات للبيهقي ـ موافق للمطبوع – (2 / 250)

812- أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ ، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدِ الدُّورِيُّ ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ ، عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ رَافِعٍ ، مَوْلَى أُمِّ سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : أَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي ، فَقَالَ : خَلَقَ اللَّهُ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ ، وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ ، وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الإِثْنَيْنِ ، وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاثَاءِ ، وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ ، وَبَثَّ فِيهَا مِنَ الدَّوَابِّ يَوْمَ الْخَمِيسِ ، وَخَلَقَ آدَمَ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ آخِرَ الْخَلْقِ ، فِي آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டு, ” அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக் குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்” என்று கூறினார்கள்.

(நூல் அஸ்மா வஸ்ஸிஃபாத், பாகம்: 2, பக்கம்: 250)

இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு இதன் விமர்சனத்தைப் பதிவு செய்கிறார்கள்.

هَذَا حَدِيثٌ قَدْأَخْرَجَهُ مُسْلِمٌ فِي كِتَابِهِ ، عَنْ سُرَيْجِ بْنِ يُونُسَ ، وَغَيْرِهِ ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ. وَزَعَمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ أَنَّهُ غَيْرُ مَحْفُوظٍ لِمُخَالَفَتِهِ مَا عَلَيْهِ أَهْلُ التَّفْسِيرِ وَأَهْلُ التَّوَارِيخِ.

இந்தச் செய்தியை இமாம் முஸ்லிம் அவர்கள் தனது (ஸஹீஹ் முஸ்லிம்) நூலில் (5379) பதிவு செய்துள்ளார்கள். சில கல்வியாளர்கள் இந்தச் செய்தி சரியானதல்ல என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்கள், வரலாற்று ஆசிரியர்களுடைய கருத்துக்கு முரணாக அமைந்திருக்கிறது.

முஸ்லிம் உட்பட பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி ஏற்க முடியாது என்பதற்கு அறிவிப்பாளர் பலவீனமானவர் என்று குறிப்பிடவில்லை. மாறாக விரிவுரையாளர்களின் கருத்துக்கும் வரலாற்று ஆய்வாளரின் கருத்துக்கும் முரணாக உள்ளது என்கிறார்கள். விரிவுரையாளர்களின் கருத்துக்கு முரணாக இருந்தால் ஒரு ஹதீஸை நிராகரிக்கலாம் என்று பைஹகி கூறுவது போல் நாம் கூறவில்லை. குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் தான் நிராகரிக்கப்படும் எனக் கூறுகிறோம்.

(இமாம் பைஹகீ அவர்கள் ஹிஜ்ரி 384 ல் பிறந்தவர்கள்)

முஸ்லிமில் உள்ள ஹதீஸ் தொடர்பாக இதே கருத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டு பல ஹதீஸ்கலை அறிஞர்கள் இதே கருத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

النكت على مقدمة ابن الصلاح – (2 / 269)

وكذا ضعفه البيهقي وغيره من الحفاظ وقالوا هو خلاف ظاهر القرآن من أن الله خلق السموات والأرض في ستة أيام والحديث أخرجه مسلم في صحيحه من جهة ابن جريج عن إسماعيل به

இதைப் போன்று பைஹகீ மற்றும் அவரல்லாத ஹதீஸ் கலை நிபுணர்களும் இதை (ஏற்றுக் கொள்ள முடியாத) பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள். (அதற்குக் காரணமாக) அல்லாஹ் வானங்கள், பூமியை ஆறுநாட்களின் படைத்தான் என்ற திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்கள்.

நூல் : அந்நுக்தா, பாகம்: 2, பக்கம்: 269

இதைப் போன்று புகாரியின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுள்ள செய்தியை திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ளது என்று இஸ்மாயீலீ அவர்கள் மறுத்துள்ளதாக ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று அவர்களிடம் கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது? என்று கேட்பார்கள்.

அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3350)

புகாரியில் உள்ள இந்தச் செய்திக்கு விரிவுரை வழங்கும்போது பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்கள் கருத்தை எடுத்துரைக்கிறார்கள்.

. وَقَدْ اِسْتَشْكَلَ الْإِسْمَاعِيلِيّ هَذَا الْحَدِيث مِنْ أَصْله وَطَعَنَ فِي صِحَّته فَقَالَ بَعْدَ أَنْ أَخْرَجَهُ : هَذَا خَبَر فِي صِحَّته نَظَر مِنْ جِهَة أَنَّ إِبْرَاهِيم عَلِمَ أَنَّ اللَّه لَا يُخْلِف الْمِيعَاد ; فَكَيْف يَجْعَل مَا صَارَ لِأَبِيهِ خِزْيًا مَعَ عِلْمه بِذَلِكَ ؟ وَقَالَ غَيْره : هَذَا الْحَدِيث مُخَالِف لِظَاهِرِ قَوْله تَعَالَى : ( وَمَا كَانَ اِسْتِغْفَار إِبْرَاهِيم لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَة وَعَدَهَا إِيَّاهُ , فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ ) اِنْتَهَى

இது அடிப்படையில் சிக்கல் உள்ளதாகும் என்று இஸ்மாயீலீ அவர்கள் கூறிவிட்டு இதன் நம்பகத்தன்மையில் குறையுள்ளது என்று சொல்லியுள்ளார்கள்.

பின்னர் அவர் இந்தச் செய்தியை பதிவு செய்து விட்டு (பின்வருமாறு) கூறுகிறார். அல்லாஹ் வாக்கு மீறமாட்டான் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் உறுதியாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும்போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படிக் கருதியிருப்பார்கள்? என்று இஸ்மாயீலீ கேட்கிறார்கள். இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர் என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாத மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 8 பக்கம் : 500

இப்ராஹீம் நபியவர்களின் தந்தை தொடர்பான இந்தச் செய்தி சரியானது அல்ல என்று குறிப்பிடும் இஸ்மாயீலீ மற்றும் பல அறிஞர்கள் இது அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர் இருக்கிறார் என்று கூறாமல் திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ளது என்று கூறியே இந்தச் செய்தியை மறுத்துள்ளார்கள்.

இதைப் போன்று இமாம் மாலிக் அவர்களும் திருக்குர்ஆனுக்கு முரண் என்றால் அதை ஏற்கக் கூடாது என்ற கருத்தில் இருந்துள்ளார்கள்.

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (1854)

இந்தச் செய்தியின் விரிவுரையில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு மாலிக் இமாம் அவர்களின் கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.

وقال القرطبي رأى مالك أن ظاهر حديث الخثعمية مخالف لظاهر القرآن فرجح ظاهر القرآن ولا شك في ترجيحه من جهة تواتره

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணியின் ஹதீஸின் வெளிப்படையான கருத்து. திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக உள்ளது என்று மாலிக் இமாம் அவர்கள் கூறி, திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கே அவர்கள் முன்னுரிமை வழங்கினார்கள் என்று குர்துபீ அவர்கள் கூறினார்கள்.

நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3 :97)  என்ற வசனம் சக்தியில்லாதவர்களுக்குக் கடமையில்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. ஆனால் புகாரியின் ஹதீஸ் செய்ய வேண்டுமென கூறுகிறது.

இது திருக்குர்ஆனுக்கு முரண்படுவதால் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும், இந்தச் செய்தி புகாரியில் இருந்தாலும் திருக்குர்ஆன் கருத்துக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார்கள் இமாம் மாலிக் அவர்கள்.

(இமாம் மாலிக் அவர்கள் ஹிஜ்ரி 93-ல் பிறந்து 179 ல் இறந்தார்கள்)