Category: -கொள்கை மற்றும் தொடர்
தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே! நாம் வாழும் இந்தியாவில் பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் இருந்தாலும், சில மக்களை தாழ்ந்த சாதி என்று ஒதுக்கி அவர்களை குறிப்பிட்ட ஒரு சமுதாயம் அடக்கி ஆளுகிறது. அவர்களை கொடுமைப் படுத்துகிறது. அவர்கள் தினம் தினம் தாக்கப்படுகிறார்கள். இது ஏதோ, ஒன்றோ இரண்டோ அல்ல. இந்தியாவில் தலித் மக்கள் தாக்கப் படுவதென்பது தனி நிகழ்வல்ல! இது அன்றாடம் நடைபெறும் அநியாயமும் அக்கிரமும் ஆகும். 1968ம் ஆண்டு கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்டார்கள் என்ற காரணத்திற்காக 44 தலித்துக்களை, உயர்ஜாதி நிலச் சுவான்தார்கள் எரித்துக் கொன்ற வடு இன்னும் ஆறவில்லை. அதன் நினைவு தினம் டிசம்பர் 25ம் […]
ஊதி அணைக்க முடியாத ஜோதி எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் என்பது இறைவனால் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட மார்க்கம். அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி இறைவனின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். இறைவனின் அருள் மழையின் காரணமாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப் ஆண்டவர் என்று அழைக்கப் படும் போப் 16ஆம் பெனடிக்ட் தனது சொந்த நாடான ஜெர்மனிக்குச் சென்றிருந்த போது பவேரியா நகரிலுள்ள ரீஜன்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில், “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்” என்ற விஷக் கருத்தை அவிழ்த்து விட்டார். அதற்கு ஆதாரமாக 14ஆம் […]
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. இஸ்லாமும் பிறமதங்களும் இஸ்லாத்தைத் தவிர ஏனைய மதங்கள் அனைத்தும் இசையை ஒரு வணக்கமாகவும் வழிபாடாகவும் கருதுகின்றன. அதனால் தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் இசைக் கருவி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. மேள தாளங்கள் முழங்கப் படுகின்றன. இதற்கு இஸ்லாம் ஒரு விதிவிலக்கு! இஸ்லாம் இதை எதிர்த்து நிற்கின்றது. எனவே உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் ஒரு பள்ளிவாசலில் கூட இன்னிசைப் பாட்டுகள் இடம் பெறுவதில்லை. இந்த அடிப்படையில் தான் தொழுகைக்கு அழைக்கப்படும் இஸ்லாமிய அழைப்பு என்பது மணியோசையாகவோ, ஊதியின் நாதமாகவோ இல்லாமல் ஒரு வித்தியாசமான, செவிக்கு இதமான பாங்கோசையாக அமைந்திருக்கின்றது. மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் […]
முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! சுயமரியாதை மார்க்கம் இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம். காரணம் அது அனைத்துலகையும் படைத்து பரிபாலிக்கும் ரப்புல் ஆலமீனாகிய இறைவன் அல்லாஹ் அருளிய அற்புதமான சுய மரியாதையைப் போதிக்கின்ற மார்க்கம். அது மனிதனுக்குத் தேவையான எல்லாத் துறைகளிலும் வழி காட்டுவதுடன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது என்பதையும் சொல்லித் தருகிறது. மேலும், படைத்த இறைவன் இறைவன் தான். அவனால் படைக்கப் பட்ட மனிதன் மனிதன் தான். மனிதன் கடவுளாகி விட முடியாது. கடவுள் மனிதனாக […]
கொள்கை மட்டும் போதாது எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! இறைவனுடைய மாபெரும் கருணையால் மறுமை வெற்றிக்கு அடித்தளமாக இருக்கக் கூடிய ஏகத்துவக் கொள்கையை ஏற்கும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். இந்த அடிப்படையில் அல்லாஹ் உலகத்தில் வாழும் அனைவரையும் விட நம்மை மேம்படுத்தி இருக்கிறான். அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். ஆனால் “இறைவனுக்கு இணை வைக்காமல் இருந்தால் மட்டும் போதும் மறுஉலக வாழ்வில் வெற்றியடைந்து விடலாம்” என்று நம்மில் பலர் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பெரும்பாலும் நல்லமல்களை நாம் செய்யாமல் இருப்பது இதைத் தான் உணர்த்துகிறது. ஏகத்துவக் கொள்கையைக் கடைப் பிடித்தவனுக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் நரகம் […]
முன்னோர்களை பின்பற்றுதல் மனிதனை நேர்வழியிலிருந்து அப்புறப்படுத்துவதிலும், மிகப் பெரிய அறிவாளியைக் கூட அறிவீனனாக ஆக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது, முன்னோர்கள் மீது கொள்ளும் குருட்டு பக்தியாகும். நமது வாழ்க்கையில் மிகப் பெரிய விஞ்ஞானிகளை, சட்ட மேதைகளை, நீதிபதிகளை, ஆராய்ச்சியாளர்களைக் காண்கிறோம். அவர்களது திறமையையும், ஆராயும் திறனையும் கண்டு மலைக்கிறோம். மற்றவர்களை பிரமிக்கச் செய்யும் அளவுக்கு அறிவுடைய இந்த மேதைகள் தாங்களே உருவாக்கிய ஒரு கல்லுக்கு முன்னால் கைகட்டி நிற்பதையும், தங்களைப் போன்ற அல்லது தங்களை விடவும் அறிவு குறைந்த மத குருமார்களின் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுவதையும் காண்கிறோம். இவர்களது அறிவும், திறனும் இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கே போயின? அற்பமான விஷயங்களில் கூட மயிர் பிளக்கும் […]
ஏகத்துவப் பணியில் இறைத்தூதர்களின் பொறுமை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அல்லாஹ் நம்பிக்கை கொண்ட மக்களைப் பார்த்து, தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் தன்னிடம் உதவி தேடச் சொல்கிறான். பொறுமை என்பதற்கு அரபியில் “ஸப்ர்’ என்பதாகும். “ஸப்ர்’ என்பதற்கு தடுத்தல், சிறை வைத்தல் என்ற பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஒருவர் சமூகத்தில் ஒரு கொள்கையை முன்வைக்கின்றார். ஆனால் அந்தச் சமூகமோ அதை ஏற்றுக் கொள்ளாமல் அனைத்து விதமான சோதனைகளையும் அவருக்குக் கொடுக்கத் துவங்குகின்றது. அவரை அடித்து சித்ரவதை செய்தல், ஊர் நீக்கம் செய்தல், சிறை பிடித்தல் அல்லது கொலை செய்ய முயற்சித்தல் போன்ற கொடுமைகளை அவருக்கு எதிராக அந்தச் சமூகம் செய்கின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் […]
தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி ஒரு ஹெர்குலியன் பார்வை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் என்பது இறைவனால் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட மார்க்கம். இந்த மார்க்கம் நமக்கு கிடைத்த வரலாற்றின் சுவடுகளை அறியவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நபிகள் நாயகம் காலத்தில், முதல் ஹிஜ்ரத் செய்த சில சஹாபாக்களிடத்தில், ஹெர்குலிஸ் மன்னர் கேட்ட கேள்விகளையும், அவர் இஸ்லாத்தை குறித்து சிந்தித்த விதங்களையும் நாம் ஆய்வு செய்தால், இந்த மார்கத்தின் சிறப்பை தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். ஹெர்குலிஸ் மன்னர் மனித ஆற்றலுக்கு மேலான ஆற்றல் படைத்த ஒருவரை ரோமனில் “ஹெர்குலிஸ்” என்று குறிப்பிடுவர். இந்தப் பெயர் ரோமா புரியின் ஆட்சியளார்களுக்கும் […]
ஏகத்துவமும் சோதனைகளும் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக, எனது உரையை ஆரம்பம் செய்கிறேன். ஏகத்துவத்தை ஒருவர் ஏற்றுக்கொண்டு, மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தால் கண்டிப்பாக அவர் ஏராளமான சோதனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப் பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், “நபிமார்கள் பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு முதுகெலும்பாக (உறுதியாக) இருந்தால் […]
முஷ்ரிக்களுடன் பழகும் முறை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். ஏகத்துவத்திற்காக தனது தந்தையையே பகைத்துக் கொண்ட இப்ராஹீம் நபியை பின்பற்றச் சொல்லும் இறைவன், முஷ்ரிக்களுடன் பழகும் முறையைப் பற்றியும் நமக்கு கற்றுத் தருகிறான். ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே […]
இன்றைக்கு தேடப்படும் வஸீலா அன்பிற்குரிய சகோதர்களே, அல்லாஹ் தனது திருமறையில், நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு “வஸீலா”வைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:35) மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் அவனை நோக்கி ஒரு “வஸீலா”வை தேடிக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறான். ஆனால் இன்றைக்கு வஸீலா என்ற பெயரில் நாம் செய்யும் ஒரு செயலை பற்றி முதலில் தெரிந்து கொண்டு, வஸீலா என்றால் என்ன என்பதை திருமறை, ஹதீஸ் மூலமாக விளங்கிக் கொள்வோம். ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் நம் சமுதாயப் பெருமக்களால் பூப்பந்தலிட்டு, புதுப்பாய்கள் விரித்து நடுவில் தலையணைகளை வைத்து பயபக்தியோடு […]
நூல்: தத்ரீபுர் ராவீ, பாகம் 1, பக்கம் 276 (இமாம் நவவீ அவர்கள் இமாம் பைஹகீ அவர்களின் கருத்து இறப்பு ஹிஜ்ரீ 676, சுயூத்தி பிறப்பு 849) الأسماء والصفات للبيهقي ـ موافق للمطبوع – (2 / 250) 812- أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ ، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدِ الدُّورِيُّ ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ ، عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ رَافِعٍ […]