Category: -பொதுவான தலைப்புகள்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் என்பது இறைவனால் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட மார்க்கம். இந்த மார்க்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களாகிய நமக்கு இறைவன் வழங்கி இருக்கிற அருட்கொடைகளில் ஒன்றான பரக்கத்தைப் பற்றியும், அதனை பெறுவதைப் பற்றியும் இந்த உரையிலே பார்க்க இருக்கிறோம். அபிவிருத்தியின் அவசியம் இவ்வுலுகில் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு வழியை பின்பற்றி மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருப்பதில்லை. வரும் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் இல்லாமல் இருப்பதில்லை. இப்படி ஏராள மானோர் வாழ்ந்து வருகின்றனர். நம் வாழ்வில் இந்த குறைகளை இல்லாமல் ஆக்குவதற்கு என்ன வழி முறை […]
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். மனித உணர்வுகளை மதிக்க தெரிந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களையும் அகில உலகத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம். இறைவனுக்குத்தான் படைத்த மனிதனின் உணர்வுகள் பற்றி தெரியும். இஸ்லாம் விளையாட்டுகளை பொருத்த வரையில் அதிலேயே மூழ்கி கிடந்து அடிமையாகாமலும் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காத வகையிலும் மோசடி, சூதாட்டம் இல்லாமலும் உடல் ஆரோக்கி யத்தையும் சிந்தனையையும் சீர்படுத்தக் கூடிய விளையாட்டுகளை அனுமதிக்கவும் செய்து அதை தூண்டவும் செய்கிறது. இன்னும் இஸ்லாம் நம்முடைய உடம்பை பேணுவதையும் வலியுறுத்தியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உன் உடம்புக்கும் கண்ணுக்கும் […]
அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. உங்கல் ஒருவரது வாசல் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலிலுள்ள) அழுக்குகல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்? என்று கேட்டார்கள். அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது என்று மக்கள் பதிலத்தார்கள். இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: […]
அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! நபிகளார் அவர்களின் அறிவுரைகளில், அவர்களது வார்த்தைப் பயன்பாட்டை வைத்து அதன் கடுமையையும் நன்மையையும் மதீப்பிடு செய்து விடலாம். சாதாரணமாகக் கண்டித்த வார்த்தைகள், கடுமையாகக் கண்டித்த வார்த்தைகள் என்று நபிமொழித் தொகுப்புகளில் நபிகளாரின் வார்த்தைப் பயன்பாட்டில் நாம் பார்க்கலாம். அந்த வகையில் சில குறிப்பிட்ட செயல்களை நபி (ஸல்) அவர்கள், இந்தச் செயலைச் செய்தவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். கடும் கோபம் ஏற்படும் போது எப்படி ஒரு தந்தை தன் […]
கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாமிய மார்க்கம் மனிதர்கள் தாங்களுடைய வாழ்வா தாரத்திற்காக பொருளாதாரத்தை திரட்டும்படி கட்டளையிடுகின்றது. பிறரிடம் கையேந்தி தனது சுயமரியாதையை இழக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளது. இஸ்லாம் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லையை வைத்திருப்பதுபோல பொருளாதாரத்தை திரட்டுவதிலும் ஒரு எல்லையை வைத்திருக்கின்றது. தடை ஏன்? எல்லையை மீறும்போது அதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நன்மைக்காகவே இதுபோன்ற எல்லைகளையும் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்றான். வரையரைகளை மீறுபவர்கள் மீது இறைவனின் கோபம் அவன் மீது ஏற்பட்டு விடுகின்றது. இதனால் அவனுடைய பிரார்த்தனையும், நல்லமல் களும் மறுக்கப்பட்டு விடுகின்றது. மக்கள் பாதிக்கப்படும்போது மக்களில் சிலர் சமுதாயத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வட்டி, லஞ்சம், மோசடி, பதுக்குதல், அளவை நிறுவை களில் குறைவு […]
அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பரிபூரண மார்க்கத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும் உரியது. சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! தன்மானம் பேணச் சொல்லும் இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய மானத்தையும், மரியாதையும் பாதுகாக்க வேண்டும். எந்நிலையிலும் தன்னு டைய மானத்தையும், மரியாதையும் இழந்து விடக்கூடாது. ஒருவர் மானத்தையும், மரியாதையும் இழக்க நேரிட்டால் சண்டையிடலாம். அந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டால் அவருக்கு ஷஹீ தின் நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகிறது. யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படு […]
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த உலகத்தில் வாழும் போது, ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது. அவனது உள்ளம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உணருவது ஒரு நிலை. அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தைத் தர வேண்டும் என்று இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது இன்னொரு நிலை. அல்லாஹ்வை நேசிப்பது மற்றொரு நிலை. இந்த மூன்று நிலைகளில், நாம் இறந்து, சொர்க்கத்தை அடைந்து விட்டால் அல்லாஹ்வை அஞ்சுவது மற்றும் அவனது சொர்க்கத்தை எதிர்பார்ப்பது ஆகிய இரு நிலைகள் நமது உள்ளத்தை விட்டு அகன்று விடும். ஏனென்றால் சொர்க்கவாசியான பிறகு இறைவனுக்குப் பயப்படும் சூழ்நிலை இருக்காது. சொர்க்கத்தை அடைந்த பின்னர், சொர்க்கத்தை அடைய வேண்டும் […]
இறைதூதரின் பிரார்த்தனை மக்கள் விரும்பிச் செல்கின்ற இடங்கள் உலகில் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் எங்குமே பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் கூட்டத்தை மக்காவில் உள்ள இறையில்லமான கஃபாவில் நம்மால் காண முடிகிறது. மக்கள் உள்ளங்களை ஈர்க்கும் புனிதத் தலமாகவும் பாதுகாப்பு மையமாகவும் இதை ஆக்குமாறு இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்ததின் விளைவால் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து போகக் கூடிய இடமாக இன்றைக்கு கஃபதுல்லாஹ் இருந்து கொண்டிருக்கிறது. “இறைவா! இவ்வூரை பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!” என்று இப்ராஹீம் கூறிய போது, “(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; […]
நாம் கேட்கும் துஆக்களில் மிகவும் முக்கியமானது இறைவா! என்னை மன்னித்துவிடு!” என்பதுதான். இதை சிறியவர் முதல் பெரியவர் வரைஏழை முதல் பண்காரன்வரை எந்த பாகுபாடு மின்றி அனைவரும் கேட்டாக வேண்டும். முதல் நபி ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) வரை அனைவருமே இவ்வாறு கேட்டவர்கள் தான். ஏனென்றால் நமது உள்ளம் தீமைகளை தூண்டக் கூடியதாக இருக்கிறது. அதனால் இறைவனின் கோபம் நம்மீது விழுந்துவிடக் கூடாது. மேலும் இதன்காரணமாக நரகில் போய்விடக்கூடாது என்ற நல்ல எண்ணம்தான். ஆதமுடைய மகன் ஒவ்வொருவரும் பகலிலும் இரவிலும் தவறிழைக் கின்றான். பின்னர் என்னிடம் பாவமன்னிப்பு தேடுகின்றனர். நான் அவனை மன்னிக்கின்றேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி […]
அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! இறைநம்பிக்கை கொண்ட மக்களிடையே இருக்கக் கூடாத பல்வேறு தீய பண்புகளை இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது. இந்த தீய பண்புகளின் காரணமாக மனிதன், தன்னை சுற்றி வாழும் மக்களுக்கு இடையூறு அளிப்பதோடு, தன்னுடைய மறுமை வாழ்விற்கும் வேட்டு வைக்கிறான். அதில் குறிப்பாக, கஞ்சத்தனம் இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்து, நாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும். ஆனால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்பவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன. அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தங்களுக்குச் சிறந்தது […]
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! நான்கு எழுத்து படித்து, பணமும் அதிகாரமும் வந்து விட்டால் அவர்களிடம் இருக்கும் பெருமையும் ஆணவமும் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வுலகத்தில் சிறப்புமிக்க இறைத்தூதராக இருந்த நபிகளார் எந்தக் கட்டத்திலும் பெருமை கொண்டதில்லை. பணிவும் தன்னடக்கமுமே அவர்களிடம் வெளிப்பட்டது. தன்னடக்கம் ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அந்த யூதர், உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் […]
இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும். நம் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் வெறுக்கத்தக்க வகையில் தீமைகளும் நிறைந்து தான் காணப்படுகின்றன. கூட்டுக் குடும்பமாக நாம் வாழ்ந்து வந்தாலும் அதில் மார்க்கம் கூறுகின்ற ஒழுக்க மாண்புகளை முறையாகப் பேணிப் பின்பற்றினால் இது […]
இஸ்லாமிய ஒழுங்குகள் சிரிப்பின் ஓழுங்குகள் சிரிப்பூட்டும் சில நிகழ்வுகள் நபியவர்களைச் சிரிக்க வைத்த பல நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. வாய் விட்டுச் சிரிக்க வேண்டிய இடங்களில் நபி (ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சிரித்திருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களில் இதை உணர்ந்து கொள்ளலாம். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) […]
ஷைத்தான் பெயரால் பித்தலாட்டங்கள் மனிதனுக்கு ஷைத்தானால் சில இடைஞ்சல்கள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்துகொள்ளலாம். “ஆதமின் மக்கüல் பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவருடைய மகனையும் தவிர”’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3431 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்-) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்- முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு […]
அல்லாஹ்வை நினைப்போம் இன்று நாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் வீதியில் நடந்து சென்றாலும் டீக்கடையில் சென்று டீ குடித்தாலும் வாகனத்தில் ஏறினாலும் எங்கும் இசை மழை! ஆபாசமான பாடல் வரிகள் நம்முடைய காதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவை செவி வழியாகச் சென்று உள்ளத்தில் பதிவாகி நம்முடைய நாவுகள் அந்த வரிகளை முனுமுனுக்க ஆரம்பிக்கின்றன. நாம் தனிமையில் இருக்கும் போது நம்மை அறியாமல் இந்தப் பாடல்கள் நம்முடைய நாவுகளில் சரளமாக நடமாடுகின்றன. இது போன்ற கட்டங்களில் நாம் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போல் சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் […]
உபரியான வணக்கங்கள் அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்குத் தண்டனையும் வழங்குகின்றான். ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வமூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அல்லாஹ்வின் நெருக்கம் கிடைக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ […]
பிரார்த்தனையே வணக்கம் இறைவன் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இறைவன் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான். “நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும்; எனக்கு எதையும் இணையாக்காதே” என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் பிரார்த்தனை! “பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) […]
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை “இக்ரஃ – நீர் ஓதுவீராக” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனை முழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு செய்து கொள்வார்கள். (புகாரி 3554) ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமளானில் திருக்குர்ஆனை இரு முறை மறு பதிவு செய்கின்றார்கள். (புகாரி 4998) அதாவது அல்லாஹ்வின் தூதர் […]
உயிரினும் மேலான உத்தம நபி ஜில்லேண்ட் போஸ்டன் என்ற பத்திரிகை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒரு பயங்கரவாதியாகச் சித்தரித்து, கேலிச் சித்திரம் வரைந்ததைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் கொதித்து, கொந்தளித்துப் போனார்கள். உலகம் முழுதும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள் மூலம் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தார்கள். இதே போன்று முன்பொரு தடவை டெக்கான் ஹெரால்ட் என்ற பத்திரிகையில் நபி (ஸல்) அவர்களை விமர்சித்து எழுதிய போதும் அதைக் கண்டித்து தமிழகமெங்கும் நாம் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இது போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்து கட்டுரை வெளியிட்ட போது அதையும் கண்டித்துத் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளோம். உலகெங்கும் உள்ள முஸ்லிம்களிடமிருந்து கிளம்பும் இந்த எதிர்ப்பலைகள், […]
மனிதரில் மாணிக்கம் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாம் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியைப் பின்பற்றி, அவர்களுடைய புகழை உலகமெங்கும் பரவச் செய்வது முஸ்லிம்களிலுள்ள ஆண், பெண் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அல்லாஹ் உயர்த்திய புகழ் இவ்வுலகத்தில் எத்தனையோ மனிதர்கள் தலைவர்கள் என்ற பெயரில் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். ஆனால் அவர்களுடைய புகழெல்லாம் அவர்கள் உயிருடன் இருந்ததோடு சரி! ஒரு சில தலைவர்கள் மட்டும் வருடத்தில் ஒரு முறையோ, இரு முறையோ நினைவஞ்சலி, பிறந்த நாள் என்ற பெயரில் புகழப்படுகின்றார்கள். அதுவும் அதைக் கொண்டாடுபவர்கள் ஏதாவது ஒரு சுயநலத்திற்காகவே அந்த நாளைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் இது போன்று போலியான முறையில் […]
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நம்பிக்கை மட்டும் போதாது. அத்துடன் நல்ல செயல்களும் அவசியம். குறிப்பாக தர்மம் என்னும் அமலைப் பற்றி இஸ்லாம் கூறும் சில ஹதீஸகளை பாருங்கள். குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே! ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 55 அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்.. அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் […]
இன்றே பாவமன்னிப்பு தேடுவோம்! அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஸலாத்தும், ஸலாமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி! அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் […]
அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நம்பிக்கை மட்டும் போதாது. அத்துடன் நல்ல செயல்களும் அவசியம். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். நல்ல அமல்களும் வேண்டும் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? (அல்குர்ஆன் 4:122) ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் […]
உயிரைக் காக்க குருதி கொடுப்போம்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! மறுமையை நம்பிக்கை கொண்ட சமுதாயமாக நாமெல்லாம் வாழ்ந்து வருகிறோம். எனினும் நம்மில் சிலருடைய நடவடிக்கைகள் மறுமையை நம்பாத மக்களை விட மோசமாக இருப்பதை பார்க்கமுடிகிறது. நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, “எனது தாயாயர் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்’ என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், “உங்கள் தாயாரின் இரத்தப் […]
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக, எனது உரையை ஆரம்பம் செய்கிறேன். தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற பெரும் பெரும் அமல்களை, அதிக நேரம் எடுக்கும் அமல்களை, பொருளாதாரத்தை செலவிட வேண்டிய அமல்களை செய்தால் தான் இறைவனிடத்தில் பெரிய அளவு தரஜாக்களை பெறமுடியும் என்று நம்மில் பல பேர் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மிகமிகக் குறைவான நேரத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு சில அமல்களில் அல்லாஹ் மிகப் பெரிய நன்மையை வைத்துள்ளான் என்பது ஈமான் கொண்டவர்களுக்கு இறைவன் வழங்கிய மிகப் பெரிய பாக்கியம், தனிப் பட்ட அருள் என்றே சொல்லலாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் […]
ஜிஹாத் செய்வோம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஜிஹாத்’ என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி மற்றும் சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி பல்வேறு அர்த்தங்கள் இருந்தாலும், பலவிதமான நற்செயல்களுக்கும் ‘ஜிஹாத்’ என்ற வார்த்தையை இஸ்லாம் பயன்படுத்துகிறது. அவற்றை அறிந்து செயல்படுத்தக் கூடியவர்களாக நாம் மாறவேண்டும். ஹஜ் செய்வதும் ஜிஹாத் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் ஆகும்” என்றார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை […]
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! எவ்வளவு செல்வம், அழகு, ஆற்றல் இருந்தாலும் இல்லாத ஒன்றைப் பற்றி நினைத்து வருந்தி கவலைப் படும் மனிதர்கள் இவ்வுலிகில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு தனி மனிதன் தன்னை விட மேலுள்ளவனையும், ஒரு குடும்பம் தனக்கு மேலுள்ள குடும்பத்தையும், ஒரு நாடு தனக்கு மேலுள்ள நாட்டையும் பார்ப்பது தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம். பொறாமையும் ஒரு முக்கிய காரணம் இன்று ஒரு தனி மனித அளவில் ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், அல்லது குடும்ப அளவிலான பிரச்சனையாக இருந்தாலும் அல்லது ஒரு நாட்டளவிலான பிரச்சனையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குமே அடிப்படையாக அமைவது ஒருவகையான பொறாமை உணர்வு தான். என்றைக்கு மேற்கூறப்பட்டவர்கள் […]
அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பரிபூரண மார்க்கத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும் உரியது. நலம் நாடுவது நம் கடமை ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும். நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றேன்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்” என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), நூல் : புகாரி 58 மென்மே […]
முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பரிபூரண மார்க்கத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும் உரியது. ஸலாத்தும், ஸலாமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இறைவன் நமக்குத் தந்த செல்வத்தை பிறருக்கு தானமாக, ஜகாத்தாக தருவதன் சிறப்புக்களைப் பற்றி இஸ்லாம் நமக்கு அதிகமதிகம் வழியுறுத்துகிறது. இரட்டிப்புக் கூலி மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள். (அல்குர்ஆன் 30:39) தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு […]
முன்னுரை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த நற்செயல்களைச் செய்யும் போது ஏராளமான நன்மைகளை அல்லாஹ் பரிசாக வழங்குகின்றான். இந்த நன்மைகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று குர்ஆனை ஓதுவது. நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். “உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று பதிலளித்தோம். “உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ […]
முன்னுரை பதினோரு முட்டாள்கள் விளையாடுகின்றார்கள், அதை பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று பெர்னாட்ஷா சொன்னதாகக் கூறுவார்கள். இன்று பெர்னாட்ஷா உயிருடன் இருந்தால் பதினோரு முட்டாள்கள் விளையாடுகின்றார்கள். அதைப் பல கோடி முட்டாள்கள் பார்க்கின்றார்கள் என்று கூறியிருப்பார். அந்த அளவுக்கு இன்று கிரிக்கெட் வெறி தலை விரித்தாடுகின்றது. பாருங்களேன்! பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியாவுக்கு கிரிக்கெட் பார்ப்பதற்காக வருகின்றார் என்றால் இந்தக் கிரிக்கெட் மோகத்தை என்னவென்று சொல்வது? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைப் பிரச்சனையிலிருந்து எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் விவாதித்து, இரு நாடுகளுக்கு மத்தியில் சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்த பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றிருக்கையில் இவர் கிரிக்கெட் ஆட்டம் […]
முன்னுரை அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! பெருகி வரும் தற்கொலை கலாச்சரம் ஓர் இளம் பெண்ணுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படுகின்றது. ஏன் என்று பார்க்கும் போது அவள் ஒரு ப்ளஸ் டூ மாணவி! தேர்வு நேரம் நெருங்குகிறது. அதனால் இந்த வாந்தியும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது என்று மனநோய் நிபுணர் சரியான காரணத்தைக் கண்டறிகின்றார். உள் மனதில் ஏற்படும் உயர் அழுத்தம் இப்படி உடல் ரீதியான அதிர்ச்சி அலைகளை, வாந்தி பேதியை உருவாக்கி […]
முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம். எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும். ஹோலி கலாச்சாரம் பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து […]
முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். உச்சி வெயில் அல்ல! காலை நேரத்தில் கிழக்கு ஓரத்தில் சூரியனின் சுடர் முகத்தின் சிவப்பு தகத்தகாயம் தெரியத் துவங்கிய மாத்திரத்திலேயே நிலப் பரப்பில் நெருப்புச் சூடு பற்றிக் கொள்கின்றது. அதன் பிறகு அது படிப்படியாக உச்சிக்கு வருகின்ற போது, உஷ்ணத்தின் அளவும் உச்சக்கட்டத்திற்கு வந்து விடுகின்றது. அனல் பந்தான சூரியன் அந்தி நேரத்தில் மேற்கு வானத்தில் அடைந்த பிறகும், […]
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இறைவன் நமக்கு விதியாக்கி இருக்கிற தொழுகை கடமையாக்கப்பட்ட நிகழ்விலிருந்து, அதன் சட்டதிட்டங்களை பின்பற்றுகிற அனைத்திலும் இறைவன் நமக்கு ஏராளமான சலுகைகளை வைத்திருக்கிறான். இந்த மனித சமுதாயம் ஒருபோதும் தொழுகையை விட்டுவிடக் கூடாது என்பதற்காக. ஆரம்பமே சலுகை தான். ஐம்பது நேரத் தொழுகை ஐந்தான அருட்கொடை. பொதுவாக மனிதனுக்கு ஒரு பணியை முதலில் குறைத்துக் கொடுத்து விட்டு, அதன் பின்னர் அதை அதிகப்படுத்தினால் அவன் அதைத் தாங்கிக் கொள்ள மாட்டான். அது தான் மனித இயல்பு! எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு எட்டு மணி நேர வேலையைக் கொடுத்து விட்டு, பின்னர் அதை 12 மணி நேர […]
ஹாஜி-யார்? இன்று திறப்பு விழா காணும் பிரியாணி ஹோட்டல் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று விளம்பர போஸ்டர்கள் வீதிகளில் ஒட்டப்படுவதைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்தப் போஸ்டர்களை எல்லாம் மிஞ்சும் விதமாக, காசிம் மரைக்காயரின் ஹஜ் பயணம் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று வழியனுப்பு விழா போஸ்டர்களும், ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பி வரும் போது, ஹாஜி பக்கீர் லெப்பையை வரவேற்கிறோம் என்று வரவேற்பு போஸ்டர்களும் கண்ணைக் கவரும் விதத்தில் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்படுகின்றன. ஹஜ் செய்வது ஒரு புனித காரியம். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைப் போல் ஹஜ் என்பது எல்லோருக்கும் கடமையாகி விடாது. யாருக்கு ஹஜ்ஜுக்குச் சென்று வருவதற்கு வசதியிருக்கின்றதோ அவர்களுக்கு மட்டுமே ஹஜ் […]
இறையச்சம் முன்னுரை கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி – இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன? இதைத் தடுக்க எத்தனை தடா, பொடாக்கள் வந்தாலும் அந்தக் கொடுமைகளை ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் தடுக்க முடிகின்றதா? இல்லை என்பது தான் யதார்த்தமான மறுக்க […]
ஈமானின் சுவை அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இன்றைய காலத்தில் வாழும் முஸ்லிம்களில் அதிகமானோர் தங்களை அறியாமலேயே தவறுகள் செய்வதற்குக் காரணம், அவர்களுக்கு ஈமான் என்றால் என்ன? என்பது தெரியாதது தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈமானைப் பற்றி அழகிய முறையில் சொல்லிக் காட்டுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மை விடுவித்த பின், அந்த இறை […]
தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! தர்மம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகளை சொல்வதோடு விட்டுவிடாமல், தர்மம் வழங்காதவர்கள் அடையும் தண்டனைகளைப் பற்றியும் இஸ்லாம் கடுமையான முறையில் நமக்கு சொல்லிக் காட்டுகிறது. வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம் “கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு […]
அழகிய கடனும் அர்ஷின் நிழலும் அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இவ்வுலகில் வாழும் போது பொருளாதார ரீதியாக சிரமப்படுவோருக்கு கடன் வழங்கினால், அதன் பின் அதனை வசூல் செய்ய அவகாசம் கொடுத்தால் அல்லது தள்ளுபடி செய்தால் மறுமையில் மிகப் பெரும் நன்மைகளை பெறமுடியும் என்று இஸ்லாமிய மார்க்கம் நமக்கு போதனை செய்கிறது. மறுமையை நம்பிய சமுதாயமா நாம்? வியாபாரம் செய்வதற்காக இன்று நாடார் சமுதாயத்தில் பொருள் கடன் கொடுத்து உதவுகின்றார்கள். அதல பாதாளத்தில் கிடப்பவனுக்கு பொருளாதாரம் எனும் மலை உச்சியில் இருப்பவர்கள் கடன் எனும் கயிறு கொடுத்து, கை கொடுத்து உதவுகின்றார்கள். உலகையே குறிக்கோளாகக் கொண்ட அந்தச் சமுதாயம் இந்த நல்ல […]
வல்ல ரஹ்மான் இறக்கியருளிய திருக்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் இக்குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரியாமல் இருக்கின்றார்கள். போலியான மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப் பற்றி அறிந்து அதன் படி செயல்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ பெயர் தாங்கிகளாக இருந்து வருகின்றார்கள். இன்னும் சிலர் “குர்ஆன் என்றால் அதை ஓர் உறையில் போட்டுப் பத்திரமாக ஓரிடத்தில் வைக்க வேண்டும்; இறந்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும் போது மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும்” என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றார்கள். எனவே முஸ்லிம்களுக்கே குர்ஆனைப் பற்றி விளக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம். குர்ஆன் என்பது உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி […]
அல்குர்ஆன் ஓதுகையில் அழுகின்ற கண்கள் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நாம் ஒவ்வொரு நாளும் தொழுகையில் அல்குர்ஆனை ஓதுகிறோம். ஓதக் கேட்டோம். ஆனால் நாம் அழவதில்லை. அழவேண்டுமா? அல்குர்ஆன் ஓதினால் அழ வேண்டுமா? ஏன்? இதோ அல்லாஹ் கூறுகின்றான் பாருங்கள்! இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 5:83) அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது. (அல்குர்ஆன் 17:109) அவர்கள் செய்து கொண்டு இருந்ததன் […]
விடை பெற்ற ரமளான் விடுக்கும் செய்திகள் எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! விடை பெற்ற இந்த ரமளான் நமக்கு விடுக்கும் சில செய்திகளை இன்றைய உரையில் பார்க்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்கிறோம். அந்த நோன்பு நம்மிடத்தில் ஏற்படுத்திய, இனி ஏற்படகிற மாற்றங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்! தொழுகை இனி எப்படி இருக்கும்? “சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர் களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை இமாமாக […]
நோன்பின் மாண்புகள் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184) நம்மிடம் இறையச்சத்தை ஏற்படுத்துவற்காக நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இந்த நோன்பின் சிறப்புகள், இதனால் மறுமையில் கிடைக்கும் பயன்களைப் பற்றி பார்ப்போம். சிறப்பு நுழைவு வாயில் சொர்க்கத்தில் ரய்யான் என்று அழைக்கப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று […]
இரவுத் தொழுகை தொழுவோமே! அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! மத்ஹப்பை பின்பற்றும் நேரத்தில் கண்ணும் கருத்துமாக தொழுத இரவுத் தொழுகை தொழும் பழக்கம், ஏகத்துவத்தை ஏற்ற மக்களிடையே பெரும்பாலும் குறைந்து வருகிறது. இரவுத் தொழுகையைப் பற்றி குர்ஆனும், ஹதீஸும் ஏராளமான சிறப்புகளை எடுத்துரைக்கின்றன. அப்படி தொழும் சிலரும் முந்திய பகுதிகளில் தொழுதுவிட்டு உறங்கி விடுகின்றனர். ஆனால், இரவுத் தொழுகையை பொருத்த வரையில் பிந்திய இரவில் தொழுவது தான் மிகச் சிறப்பான வணக்கமாகும். எனவே, பிந்திய நேரங்களில் தொழுவதன் சிறப்பைத் தெரிந்து கொண்டு, முடிந்த அளவு அதைச் செயல்படுத்தி, அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக! விலகி விடும் விலாப்புறங்கள் அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது […]
ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றைப் பண்டிகைகளாகக் கொண்டாடி வருகின்றனர். பொதுவாக பண்டிகை என்றால் அதில் கேளிக்கைகளும் இடம் பெற்றிருக்கும். தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது ஒரு வணக்கமாகவே கருதி செய்யப்படுகிறது. இது போன்ற பண்டிகைகüல் வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை எரிய விட்டுக் கொண்டாடும் அதே வேளையில் ஏழைகள் அடுப்பெரிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடுவதைப் பார்க்கிறோம். ஆனால் மனித குலத்தின் வாழ்க்கை நெறியான இஸ்லாமில் வசதி படைத்தவர்களுடன் சேர்ந்து ஏழைகளும், பெருநாட்களைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இரு பெருநாட்கüலும் இரு வேறு விதமான தர்மங்களை மார்க்கம் […]
அருள்மிகு ரமலான் பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானி வந்துவிட்டது அருள் மிக்க ரமலான்! “ரம்மியமான ரமலான் வராதா? அல்லாஹ்வின் அருள் மிக்க பாக்கியம் கிடைக்காதா?” என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பலர் “ஏன்டா ரமலான் வருகிறது?” என்று எண்ணிப் புலம்பித் தவிக்கின்றனர். காரணம் என்னவென்றால், தன் பிள்ளைக்கு இதுதான் தலை நோன்பு! எனவே புது மருமகனுக்குச் சீர் செய்ய வேண்டுமே! இதுவே பெரும்பான்மை யான, பெண்ணைப் பெற்ற முஸ்லிம்களின் நிலை. இது இவ்வாறிருக்க, அதிகமான மக்கள் ரமலான் என்றாலே பெருநாளை மனதில் வைத்துக் கொண்டு, அதற்காக துணி எடுத்தல், வர்த்தகம் செய்தல், சீர் வாங்குதல், சீர் கொடுத்தல் போன்ற […]
ஜும்ஆவின் சிறப்புகள் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் வழங்கிய பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியம் ஜும்ஆ – வெள்ளிக்கிழமையாகும். யூதர்களுக்கு சனிக்கிழமை புனித நாள் என்றால், கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனித நாள் என்றால் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாளாகும். இன்று அரபகத்தைத் தவிர உலகத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அமைந்துள்ளது. வணக்கத்திற்காக அமைந்த அந்த ஞாயிற்றுக்கிழமை இன்று விடுமுறை என்ற பெயரில் வீண் கேளிக்கைகளில், திரைப்படக் கூத்துகளில் கழிந்து கொண்டிருக்கின்றது. இதே போலத் தான் அரபகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமையின் அருமை பெருமை தெரியாமல், அரபக மக்களும் சரி! இங்கிருந்து பிழைக்கப் […]
மார்க்கத்தின் பார்வையில் மினா உயிர்ப் பலிகள் பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானீ இறைவனை நெருங்குவதற்காக இன்று பலர் பல வகையான வணக்கங்களைப் புரிந்து வருகிறார்கள். தங்களைத் தாமே வருத்திக் கொண்டு புரியும் வணக்கமே இறைவனுக்குப் பிடித்தமானது என்றும் அதன் மூலமே அவனது பொருத்தத்தைப் பெற முடியும் என்றும் நினைக்கிறார்கள். காலணிகள் இருக்கும் போது, “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” என்று கூறிக் கொண்டு செருப்பு அணியாமல் கரடு முரடான பாதையில் நடந்தும், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்தும், பல அடி நீளமுள்ள வேல்களை நாவிலும், மேனியிலும் குத்திக் கொள்வதும், தேரைத் தன் முதுகில் மாட்டி இழுப்பதும், தீ மிதிப்பதும், மண்ணில் புரள்வதும், மண் சோறு […]
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! சித்திரையின் உச்சக்கட்டமான கத்திரி வெயில் கால கட்டம் முடிந்தும் கோர வெப்பத்தின் கொடிய தாக்கம் இன்னும் ஓயவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்கி சுருண்டு விட்டனர். தற்போது தான் சற்று வெப்பம் தணிந்து காற்று வீசத் துவங்கியுள்ளது என்றாலும் அவ்வப்போது 106, 107 டிகிரி என்ற கணக்கில் கொளுத்திக் கொண்டு தான் இருக்கின்றது. இங்கு இப்படி என்றால் வட மாநிலங்களில் வெயிலின் வெப்பப் பசிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை முன்னூற்று ஐம்பதைத் தொட்டு விட்டது. அங்கு வீசிய அனல் காற்றில் அவர்களின் சூடான சுவாசக் காற்று நின்று போனது தான் இந்தத் தலையங்கத்தின் தூண்டுகோலாக – […]
இரவுத் தொழுகை புனித மிக்க ரமளானில் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அளிக்கின்றான். இம்மாதத்தின் பகல் காலங்களில் நோன்பு நோற்பதற்கும் இரவில் நின்று வணங்குவதற்கும் மகத்தான கூலிகளை வழங்குகின்றான். ரமளானில் இரவு நேரத்தில் முந்திய பகுதிகளில் தொழும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. பிந்திய இரவில் தொழுவது தான் மிகச் சிறப்பான வணக்கமாகும். எனவே பிந்திய நேரங்களில் தொழுவதன் சிறப்பைத் தெரிந்து கொண்டு அதைச் செயல்படுத்தி,அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக! ரமளான் மாதத்தில் விடாது கடைப்பிடிக்கும் இந்த இரவுத் தொழுகையை ரமளானுக்குப் பின்னரும் தொடர்வோமாக! விலகி விடும் விலாப்புறங்கள் அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து […]
தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள் எம். ஷம்சுல்லுஹா தர்மம் வழங்காதவர்கள் அடையும் தண்டனைகளைப் பற்றி குர்ஆனும் ஹதீசும் கடுமையான முறையில் சொல்லிக் காட்டுகின்றன. வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம் “கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் […]
ஜமாஅத் தொழுகை எம். ஷம்சுல்லுஹா நயவஞ்சகரின் அடையாளம் சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (657) (ஜமாஅத்திற்குப் போகாமல்) தன் வீட்டிலேயே தங்கியிருந்து இன்னார் தொழுவது போல் […]
ரகசியம் ஓர் அமானிதமே! எம். ஷம்சுல்லுஹா “நண்பா! ஒரு முக்கியமான செய்தியை உன்னிடம் சொல்ல விரும்புகின்றேன். தயவு செய்து அந்தச் செய்தியை உன்னுடன் ரகசியமாக வைத்துக் கொள். அதை நீ யாரிடமும் சொல்லி விடக் கூடாது” என்ற வேண்டுகோளுடன், நிபந்தனையுடன் ஒருவர் தன் நண்பரிடம் ஒரு செய்தியைத் தெரிவிப்பார். அவரும் இதை ஒப்புக்கொண்டு அந்தச் செய்தியைச் செவியுறுவார். மீண்டும் அவர் தனது வேண்டுகோளைப் புதுப்பித்தவராக, “நீ இதை யாரிடமும் சொல்லி விடாதே!” என்று கேட்டுக் கொள்வார். இப்படி ஒருமுறை இரண்டு முறையல்ல! பல தடவை இவ்வாறு கேட்டுக் கொள்ளும் போது, சொல்ல மாட்டேன் என்று தலையாட்டி விட்டு, செய்தியைச் சொன்னவர் இடத்தைக் காலி செய்த […]
மனத் தூய்மையும் மகத்தான கூலியும் எம். ஷம்சுல்லுஹா மனிதன் இறைவனை வணங்கும் போது அந்த வணக்கத்தை அவனுக்காகவே தவிர வேறு யாருக்காகவும் ஆக்கி விடக்கூடாது என்ற நிபந்தனையை முக்கியமான நிபந்தனையாக இறைவன் விதித்திருக்கிறான். ஒரு வணக்கத்தைச் செய்யும் போது அவனை இன்னொரு மனிதன் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், புகழவேண்டும் என்பதற்காகவும், அல்லது உலகப் பலனை அடைய வேண்டும் என்பதற்காகவும் செய்தால் அந்த வணக்கத்தை இறைவன் தூக்கி எறிந்து விடுகின்றான். இதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன. செயல்கள் எண்ணங்களைக் கொண்டு தான் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும். யாருடைய (நாட்டை விட்டு வெளியேறும்) பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய […]
இறைப் பொருத்தம் அமீன் பைஜி, கடையநல்லூர் உலகில் பிற மனிதர்களின் நெருக்கம், அவர்களின் பொருத்தம் கிடைக்க வேண்டுமென்று நாம் பெரிதும் ஆசைப்படுகிறோம். ஒவ்வொரு செயலிலும் தமது விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, பிறர் இதைப் பொருந்திக் கொள்வார்களா என்ற எண்ணமே அதிகமான மனிதர்களிடம் மேலாங்கி உள்ளது. ஆடை, வாட்ச் போன்ற சாதாரண பொருட்களைக் கூட பிறரின் பொருத்தத்தை முன்னிறுத்தியே தேர்வு செய்யும் பழக்கம் பலரிடமும் காணப்படுவது இதற்கு மிகச் சிறந்த ஓர் எடுத்துக் காட்டு. அற்பமான இவ்வுலகில், சாதாரண மனிதனின் பொருத்தம் பெற முயற்சி செய்யும் நாம், நம்மைப் படைத்த இறைவன் நம்மை இரு உலகிலும் திருப்தி கொள்வதற்காக எதைச் செய்கிறோம் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். […]
அன்பளிப்பு செய்வோம் அன்பளிப்பின் சிறப்பு: மனிதர்கள் அனைவரும் எதாவது ஒரு வகையில் மற்றொருவரோடு தொடர்பு கொண்டு தான் இவ்வுலகில் வாழ முடியும். பிறரோடு தொடர்பே இல்லாமல் எவராலும் வாழ இயலாது, தான் தொழில் செய்யும் போது, அல்லது கடையில் பொருள்கள் வாங்கும் போது, கடன் கொடுக்கும் போது வாங்கும் போது, என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிற மனிதர்களை சார்ந்து தான் வாழ இயலும். அப்படி வாழும் நம்மிடையே ஒற்றுமையும், பாசமும் மேலோங்க வேண்டும் என்பதற்காக, இஸ்லாம் ஒரு அழகான வழிமுறையை கற்றுத் தருகிறது. அது தான் அன்பளிப்பு. ஒருவர் பிறருக்கு, நண்பருக்கு அன்பின் காரணமாக ஒரு பொருளையோ, உணவையோ, ஆடையையோ அல்லது வேறு எதையுமோ கொடுப்பது. […]
தொழுகையை பேணுவோம்! இஸ்லாம் என்றாலே தொழுகைதான் பல்வேறு கடவுள் நம்பிக்கைகள் கொண்ட சமுதாயங்கள் உலகில் உள்ளன. அதில் இறைவன் ஒருவன் தான். என்று அவனை மட்டுமே வணங்கி, இணைவைக்காமல் வாழ்ந்து சொர்க்கத்தை பெற வேண்டும் என்ற ஆசையில் வாழும் சமுதாயம், இந்த முஸ்லிம் சமுதாயம். வந்தே மாதரம் என்று கூறினால் மண்ணை வணங்குவதாக ஆகிவிடும். என் உயிரே போனாலும் அப்படி கூற மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கும் சமுதாயம், இந்த முஸ்லிம் சமுதாயம். கடவுடள் கொள்கையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத முஸ்லிம்கள், சுவனத்தை எதிர்நோக்கியுள்ள இந்த முஸ்லிம்களில் ஒரு பெரும் கூட்டத்தினர் , சுவனத்திற்கு செல்வதற்கு தடையாக உள்ள மிகப் பெரிய ஒரு விஷயத்தை கண்டும் காணாத மக்களாக […]
வறுமை என்பதும் சோதனையே வறுமை சிறப்பிற்குரியது, வறுமை, கஷ்டம் ஏற்பட்டால் அதனை சோதனை என்று விளங்காமல். இறைவன் நம்மை தண்டித்து விட்டான் என்று என்ணும் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் இறைவன் நம் துஆவை யெல்லாம் ஏற்கமாட்டான். இது முஸீபத்து என்று எண்ணி கவலைப் படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்த வரை, வறுமை என்பது சிறப்பிற்குரியது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாகப் பெண்களைப் பார்த்தேன்” அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: புகாரி 3241 நபி (ஸல்) […]
பிறருடைய மானம் புனிதமானது மறுமையை நம்பி வாழும் முஸ்லிம்களில் பலர் பிறருடைய பொருளை திருடுவது கிடையாது. பிறருடைய சொத்துக்களை அபகரிப்பது பெரும் பாவம் என்று உணர்ந்திருக்கிறார்கள், எனினும் பிறருடைய மானம் அதை விட புனிதமானது, மதிப்பு மிக்கது என்பதை விளங்காமல் இருக்கிறார்கள். நண்பர்கள் பலரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு உரையாடிக் கொண்டிருப்பர். அங்கே பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் அவர்களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும். அவ்வாறு கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும் போது. அவர்களில் பொருளாதாரத்தில் குறைந்தவர் ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்வார். உடனே பக்கத்திலுள்ள ஒருவர், “ஆமாம். இவர் பெரிய தத்துவ முத்தை உதிர்த்து விட்டார். நீ எல்லாம் எங்கோ இருக்க வேண்டிய ஆள். இங்கே வந்து […]
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கடன் கொடுக்கக் கூடியவர்களாகவோ, கடன் வாங்கக் கூடியவர்களாகவோ இருப்போம். கடன் பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் நடக்க வேண்டிய முறைகளை இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது. கடன் வாங்குவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. எனினும், கடன் வாங்குபவர், தான் பெற்ற கடனை அமானிதமாக நினைத்து சரியான முறையில் திருப்பி ஒப்படைக்க வேண்டும். கடன் ஓர் அமானிதம் நிச்சயமாகக் கடன் நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதம். அதை கண்டிப்பாக சரியான முறையில் திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அமானிதங்களை அதற்குரி யோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் […]
சுன்னத்தான நோன்புகள் பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:183)என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று விட்டோம். இது அல்லாஹ் நமக்குக் கடமையாக்கிய நோன்பாகும். இவை தவிர கடமையல்லாத நோன்புகளும் உள்ளன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்திய, செயல்படுத்திய சுன்னத்தான நோன்புகள் பற்றிய விபரத்தைப் பார்ப்போம். ஆறு நோன்பு ரமளான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்பு பிடிப்பதை நபி […]
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! ஒருமாத காலம் நோன்பை இறைவனுடைய திருப்தியை நாடி நோற்று, அவனுடைய பரிசை எதிர்பார்த்து நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். இந்த நேரத்தில் நாம் நினைவில் வைக்க வேண்டிய சில செய்திகளை இந்த பெருநாள் உரையிலே நாம் பார்க்க இருக்கிறோம். ஏனென்றால் பண்டிக்கை என்றாலே பலருக்கு புதிய ஆடையை அணியவேண்டும், சுவையான உணவு சாப்பிடவேண்டும், எங்கேயாவது ஊர் சுற்றவேண்டும், இன்னும் சிலர் நண்பர்களோடு சினிமா தியேட்டருக்கு போகவேண்டும், என்று இந்த பெருநாளை கழிப்பதை பார்க்கிறொம். இறையச்சத்தை பெறுவதற்கா, ஒருமாத காலம் பயிற்சி பெற்ற நாம் அதை பெற்றிருக்கிறோமா என்று சிந்திப்பார்க்க இந்த நாளை செலவிட தவறிவிடுகிறோம். ஏனெனில், முஸ்லிம்களாகிய நாம் மரணத்திற்கு பின் ஒரு […]
‘ஏழ்மை’ ‘வறுமை’ போன்ற வார்த்தைகள் இன்றைக்கு மனித சமுதாயத்தால் மிகவும் வெறுக்கப் படுகிறது. நாம் இந்த உலகத்தில் செல்வச் செழிப்போடு வாழ வேண்டும், நமக்கு எந்தச் சோதனைகளும் ஏற்படவே கூடாது என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். இன்றைக்கு உலகில் நடைபெறும் கொலை, கொள்ளை, அபகரிப்பு, போன்றவை, அதிகமான செல்வத்தை அடைய வேண்டும் என்ற ஆசையில் தான் செய்யப்படுகின்றன. இலஞ்ச லாவண்யங்களை வாங்கிக் கொண்டு அதிகார வர்க்கம் நீதிக்குப் புறம்பாக நடப்பதற்குக் காரணமும் நமக்கு வறுமை வந்து விடக்கூடாது, செல்வச் செழிப்பை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான். கந்து வட்டி, மீட்டர் வட்டி என்ற பெயரில் வட்டி மூஸாக்கள் பிறர் சொத்துக்களை தனதாக்கிக் கொள்வதற்குக் […]
எது முரண்பாடு? முரண்பாட்டின் வரையறைகள் என்ன? தொடர் 3, அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.ஸி. இதுவரை என்னென்ன காரணங்களால் போலி முரண்பாடுகள் தோன்றுகின்றன என்பதை விரிவாகப் பார்த்தோம். முரண்பாடு தொடர்பாக நமது அறிவை இன்னும் விசாலப்படுத்திக் கொள்வதற்காக முரண்பாடு என்று எதைச் சொல்வது? என்பதை சுருக்கமாகக் காண்போம். ஏனெனில் இன்றைய காலத்தில் முரண்பாடு பற்றிய போதிய தெளிவு இல்லாமல் அதிகமானோர் உள்ளனர். கூடுதலான தகவலைக் கூட முரண்பாடு என்று இத்தகையோர் கருதி விடுகின்றனர். எனவே ஒரு விஷயத்தில் முரண்பாடு உள்ளது என்று சொல்வதாக இருந்தால் அதற்கான நிபந்தனைகள் என்ன? முரண்பாடு என்று குறிப்பிடும் முன் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்? உள்ளிட்ட விவரங்களை அறிஞர்கள் வகுத்துக் […]
சபீர் அலி. எம்.ஐ.எஸ்.சி இஸ்லாம் மார்க்கத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களும், தூய எண்ணத்துடன் செயல் ரீதியாக செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளும் உள்ளன. இவ்வாறு செயல் வடிவில் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் முதன்மையானது தொழுகையாகும். தொழுகை என்பது இறைவனுக்காக ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு நாளைக்கு குறித்த நேரத்தில் குறிப்பிட்ட முறையில் ஐவேளை செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகும். தொழுகையைத் தவறவிடாமல் சரியான முறையில் நிறைவேற்றுபவர்களுக்கு இறைவனிடம் ஏராளமான நன்மைகள் உள்ளன. “தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்”. அல்குர்ஆன்(4:162). மேலும், தொழுகையைப் பேணாமல் தவறவிட்டவர்களுக்கு தண்டனைகள் உள்ளது என்பதையும் திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது. அவர்கள் […]
பெற்றோரை பேணுவோம் மனிதன் சந்திக்கும் பல்வேறு உறவுகளில் மிகமிக முக்கியமான உறவு பெற்றொர் என்ற உறவு தான். அந்த பெற்றோர்களை மதிக்க, பேணுச் சொல்லும் இறைவன், தன்னை வணங்குவதற்கு அடுத்த மிக முக்கியமான கடமையாக இதனை சொல்லிக் காட்டுவதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். ”என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ”சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது […]