பருவ மழையைப் பாழாக்கிய தமிழகம்
கொட்டித் தீர்த்தது மழை, சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது, பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்ற செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் தமிழகத்திற்குத் தேவையான மழைபெய்ந்து விட்டதா? என்றால் நிச்சயம் இல்லை என்று சொல்லலாம். இதை வரும் கோடைகாலங்களில் நாம் உணருவோம். வடகிழக்குப் பருவமழைதான் தமிழகத்தின் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. இக்காலமே. தென்னிந்திய தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலமாகும். குறிப்பாக ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவையின் தேவையை இந்த மழைதான் பூர்த்தி செய்கிறது. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த […]