மற்ற பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும்
ஷைத்தான் அவளை நோக்குகிறான்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”பெண் என்பவள் மறைவாக இருக்க வேண்டியவள் ஆவாள். அவள் (வீட்டிலிருந்து) வெளியேறினால் ஷைத்தான் அவளை உற்று நோக்குகிறான்.”
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : திர்மிதி (1173)
இந்தச் செய்தி அறிவிப்பாளர்கள் ரீதியாக பலவீனமானதாகும். கதாதா அவர்களிடமிருந்து மர்ஃபூ (நபியவர்கள் கூறியதாக) அறிவிக்கப்படும் செய்தியை மூன்று மாணவர்கள் அறிவிக்கின்றனர். 1. ஹம்மாம். 2. ஸயீத் இப்னு பஷீர். 3. சுவைத் பின் இப்ராஹிம் இந்த மூன்று நபர்களுமே பலவீனமானவர்கள் ஆவார்கள்.
யாஸிர் (ரலி) அவர்கள் சம்பவம்
யாஸிர் (ரலி) அவர்களை மக்கா காஃபிர்கள் பிடித்து, அவர்களின் ஒரு காலை ஒரு ஒட்டகத்திலும் இன்னொரு காலை இன்னொரு ஒட்டகத்திலும் கட்டி இரு ஒட்டகங்களையும் இருவேறு திசையில் ஓடச் செய்து, இருகூறாக பிளந்து கொலை செய்யப்பட்டார்கள்.
இந்த செய்தியை நாம் அறிந்த வரையில் எந்த நூலிலும் பார்க்க முடியவில்லை.
நபியின் மீது குப்பையைக் கொட்டிய மூதாட்டி
தொடர்ந்து தம்மீது குப்பையைக் கொட்டிய மூதாட்டி ஒரு நாள் குப்பையைக் கொட்டாததால், அவரைப்பற்றி அருகிலுள்ளோரிடமும் விசாரித்து, அம்மூதாட்டிக்கு நோய் என்று கேள்விப்பட்டதும் அவர் தமக்குச் செய்த கொடுமையை மனதில் எண்ணாமல் மிகுந்த அக்கறையோடு சென்று அம்மூதாட்டியை நலம் விசாரிக்கின்றார்கள். நபிகளாரின் வருகையைச் சற்றும் எதிர்பாராத அம்மூதாட்டி செய்வதறியாது மனமுருகிறார். மனம் நெகிழ்ந்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்கிறார்.
உமரின் அழைப்பு
உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப்போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில்உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, “சாரியாவேஅந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல்” எனக்கூறினார்கள். போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலி) அவர்கள்இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்கதொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தைபடைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன்பிறகு வெற்றி கிடைத்தது. இவ்வாறு மேற்கண்ட செய்தி கூறுகின்றது.
நூல்: தலாயிலுன் நுபுவ்வா 509
இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. இவையனைத்தும் பலவீனமாகவே உள்ளன. மேலுள்ள அறிவிப்பில் அய்யூப் பின் கூத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இமாம் புகாரி, நஸாயீ, அபூஹாதிம், ஹாகிம், அஹ்மது பின் ஹம்பள்,தாரகுத்னீ, அபூதாவுத் மற்றும் பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர்என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 1, பக்கம்: 402
இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் ரீதியில் பலவீனமாக இருப்பதுடன் இதன் கருத்து குர்ஆனுடன் மோதும் வகையில் அமைந்துள்ளது.
மனிதப் பார்வை அடையாத வெகு தொலைவில் நடந்த நிகழ்வை உமர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என இந்தக் கதை கூறுகின்றது. இறைவனுக்கு மட்டும் உரிய மறைவான ஞானம் என்ற அம்சம் உமர் (ரலி) அவர்களிடமும் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கின்றது. இது இணை வைப்பாகும்.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிரயாரும் அதை அறிய மாட்டார்.
(அல்குர்ஆன் 6:59)