Category: 1-தொழுகை
வரையறை இல்லை. எனினும்….. ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை. எனவே இத்தனை நாள் தங்கினால் மட்டுமே கஸ்ர் செய்ய வேண்டும்; அதற்கு மேல் தங்கினால் கஸ்ர் செய்யக் கூடாது என்று கூறுவதற்கு மார்க்கத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அந்நாட்களில் கஸ்ர் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாட்களுக்குப் பிரயாணம் செய்தால் கஸ்ர் செய்வோம். அதிகமானால் முழுமையாகத் தொழுவோம். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1080 இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாட்கள் தான் […]
25கிமீ சென்றால் கஸ்ர். ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம். கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ”நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தனர். முஸ்லிம் 1230 சுமார் 25 கிலோ மீட்டர் அளவிற்கு ஒருவர் பயணம் செய்தால் அவர் ஜம்வு மற்றும் கஸர் செய்து கொள்ள மார்க்கம் அனுமதிக்கின்றது. காயல்பட்டணத்திலிருந்து ஒருவர் தூத்துக்குடிக்குப் புறப்பட்டு வருகின்றார். இவர் கஸர் தொழலாம். ஆனால் இதே அளவு தூரம் ஒருவர் சென்னையில் […]
நான்கையும் ஒரு ஸலாமில். லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒரே சலாமில் தொழ ஹதீஸ் உள்ளதா? கடமை அல்லாத எல்லா தொழுகைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டாகத் தொழுதார்கள் என்று வந்துள்ளதே? அது இரவுத் தொழுகையைத் தான் குறிக்குமா? ஜூம்ஆவின் முன் சுன்னத் நான்கு ரக்அத்துகளை எப்படித் தொழ வேண்டும்? லுஹருக்கு முன் உள்ள சுன்னத் தொழுகை இரண்டு ரக்அத்கள் எனவும், நான்கு ரக்அத்கள் எனவும் ஹதீஸ்கள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். புகாரி 937, 1169 லுஹருக்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு ரக்அத்களை விட்டதே இல்லை என்று ஆயிஷா […]
இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஹாஜத்’ தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும். “யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, “லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிக, வஅஸாயிம மஃபிரதிக. வல்கனீமத மின் […]
தொழலாம் கடமையான தொழுகைக்கு முன்னால் நிறைவேற்றப்படுவதே முன் சுன்னத். இதை அதற்குரிய நேரத்தில் தொழத் தவறினால் கடமையான தொழுகையை முடித்த பிறகு நிறைவேற்றலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபித்தோழர் ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்தை ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றிய பின் தொழுதுள்ளார். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன்ன சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் […]
உடனே தொழக் கூடாது. நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் : (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடன் ஒருவர் எழுந்து தொழ ஆரம்பித்தார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அவரிடம் (சென்று) அமர்வீராக. வேதக்காரர்கள் தங்களுடைய தொழுகைகளுக்கு இடையே பிரிவின்றி அவற்றை (சோந்தாற்போல்) நிறைவேற்றியதால் தான் அழிந்து போனார்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் சரியாகச் சொன்னார் என்று கூறினார்கள். நூல் : அஹ்மது 22041 மேற்கண்ட ஹதீஸில் கடமையான தொழுகை தொழுத பின் உபரியாக தொழ நாடினால் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணையாமல் இடம் மாறிக் கொள்ள வேண்டும். அல்லது […]
சிறந்தது அல்ல. விதிவிலக்காக தொழலாம். ‘இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 998, 472 எனவே வித்ரை கடைசி தொழுகையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். எனினும், வித்ரு தொழுகைக்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். (முதலில்) எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு (மூன்று ரக்அத்) வித்ரு தொழுவார்கள். பிறகு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ருகூவுச் செய்ய […]
ஆம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது தம் இரு கைகளையும் உயர்த்தியுள்ளதால் வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத் முடித்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போதும் இரு கைகளையும் உயர்த்த வேண்டும். இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து நிலைக்கு உயரும் போதும் கைகளை உயர்த்துவார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாகவும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் : நாஃபிவு புகாரி 739
இல்லை. குனூத் ஓதும் போது தக்பீர் கூறி கைகளை உயர்த்திக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஆம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (1145) எனவே, இரவுத்தொழுகையை இரவில் இறுதியில் தொழுவது, துஆ கேட்பது சிறந்தது.
மக்கா நமது வழிகாட்டி இல்லை. சவூதி அரேபியாவில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் எட்டு அல்லது பத்து ரக்அத்கள் தான் தொழுவிக்கப்படுகின்றன. ஆயினும் மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியிலும் மட்டும் இருபது ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றது. அதை நாம் ஏன் முன்னுதாரணமாக ஆக்கக் கூடாது என்ற கேள்வி தவறாகும். மக்காவையும், மதீனாவையும் வணக்க வழிபாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை. மாறாக, நான் எவ்வாறு தொழுதேனோ அவ்வாறு தொழுங்கள்’ என்பது தான் அவர்களின் கட்டளை. நூல் : புகாரி 631, 6008, 7246 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டாத வணக்கத்தை உருவாக்கவோ, அல்லது அதிகப்படுத்தவோ மக்கா, […]
இஷாக்கு பிறகு பஜர் முன்னர் வரை. வித்ர் பஜ்ருக்கு பிறகும். ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: நஸாயீ 1588 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுதது முதல் பஜ்ரு வரை பதினோரு ரக்அத் தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1216 இரவுத் தொழுகையை இஷாவிலிருந்து […]
தொழலாம். மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள். 1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை. 2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை. 3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை. அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி) நூல்: முஸ்லிம் 1373 மேற்கண்ட மூன்று நேரங்கள் பொதுவாகத் தொழுவதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள். ஆனால் கிரகணத் தொழுகையைப் பொறுத்தவரை அதை எப்போது தொழ வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள். கிரகணம் ஏற்பட்டது முதல் அது நீங்குகின்ற […]
இல்லை. இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது என்றும் அந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்றும் சிலர் கருதுகின்றனர். இவ்வாறு தொழுதால் ஹஜ் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர். ஒருவர் ஃபஜர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவுகூறுகிறார். சூரியன் உதித்த பிறகு அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஹஜ்ஜும், உம்ராவும் செய்த நன்மையைப் போன்று அவருக்கு (நன்மை) கிடைக்கும். நூல் : திர்மிதி 535 இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து […]
குளிப்பாட்டலாம். குளிப்பு கடமையானவர் என்ன செய்யக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கியுள்ளனர். அவர்கள் ழக்கூடாது; பள்ளிவாசலில் நுழையக்கூடாது; தவாப் செய்யக் கூடாது என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர ஜனாஸாவைக் குளிப்பாட்டக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லவில்லை. குளிப்பு கடமையானவர்களும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், உளூ இல்லாதவர்களும் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாம். தொடலாம். எனினும், அடக்கம் செய்பவர் நேற்றிறவு இல்லறத்தில் ஈடுபடாதவர் இருந்தால், முக்கியத்துவம் தரலாம். ஜனாசாவை குளிக்குள் இறக்கி வைப்பதற்காக யாரும் இறங்கலாம், ஆனால் நபிகளார் அதற்கு நிபந்தனையாக அன்றைய இரவு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாதவரை தேர்வு செய்தார்கள் என்பதை பார்க்கமுடிகின்றது, அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: […]
கூடாது. மூன்று காரியங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். ஆனால் மக்கள் அவற்றை விட்டுவிட்டனர். (கடமையான) தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவது அவற்றில் ஒன்றாகும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : பைஹகீ 6586 கடமையான தொழுகையில் இரண்டு ஸலாம் சொல்லப்படுவது போல் ஜனாஸாத் தொழுகையிலும் இரண்டு ஸலாம் கொடுக்கலாம் என்று மேற்கண்ட செய்தி கூறுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு ஒரு ஸலாம் கொடுத்ததாக தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் உள்ளது. கன்னாம் பின் ஹஃப்ஸ், அப்துல்லாஹ் பின் கன்னாம் ஆகிய இருவர் வழியாகவே இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது. இவ்விருவரும் யார் […]
தொழலாம். அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை. அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ் நூல்: ஹாகிம் 1/519 (1350) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி இறந்தவரின் குடும்பத்தினர் ஜனாஸா தொழுகை தொழுதுள்ளனர். அதுவும் இறந்தவரின் வீட்டில் வைத்து தொழுதுள்ளனர். அதில் ஒரு […]
இல்லை. ஒரு முஸ்லிம் இறந்த பிறகு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்து விட்டனர். பின்னர் இறந்தவர் இயற்கையாக மரணிக்கவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறி மறுபடியும் தோண்டி மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு மறுபடியும் ஜனாஸா தொழுகை நடத்தப் பட வேண்டுமா? பதில் – ஜனாஸா தொழுகை என்பது இறந்து விட்ட ஒரு முஸ்லிமுக்காக மற்ற முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு பிரார்த்தனையாகும். முதலில் அடக்கம் செய்யும் போது ஜனாஸா தொழுகை தொழுது விட்டால் மீண்டும் தோண்டி அடக்கும் போது தொழ வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இறந்ததற்காகத் தான் தொழுகை நடத்தப் படுகின்றதே தவிர அடக்கம் செய்வதற்கும், […]
இல்லை. நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தொழுகையில் அனைத்தையும் அரபியில் தான் ஓதியுள்ளனர். இது தான் அவர்களின் ஆதாரம். இந்த ஆதாரத்தினடிப்படையில் தொழுகையில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். அவர்களிடம் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டால் பதில் இல்லை. நபியவர்கள் தொழுகையில் மட்டுமின்றி தொழுகை அல்லாத நேரங்களில் செய்த பிரார்த்தனைகளையும் அரபியில் தான் செய்துள்ளனர். அப்படியானால் தொழுகைக்கு வெளியில் கேட்கும் துஆக்களையும் அரபியில் தான் கேட்க வேண்டுமா? தாய் மொழியில் கேட்கக் கூடாதா? நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஜும்ஆப் பேருரை மற்றும் ஏனைய உரைகளை அரபியில் தான் நிகழ்த்தியுள்ளனர். இவர்கள் கூறுகின்ற அதே வாதத்தின் படி குத்பாக்கள் முழுக்க முழுக்க […]
துஆ கேட்கலாம். நஃபில் தொழுகை கூடாது. மூன்று நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து உள்ளார்கள். மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள். 1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை, 2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும் வரை. 3. சூரியன் மறையத் துவங்க்கியதிலிருந்து நன்கு மறையும் வரை. நூல் : முஸ்லிம் 1371 இந்த நேரங்களில் எந்தத் தொழுகையும் தொழக்கூடாது. எனினும் இந்த நேரங்களில் துஆ செய்வதற்குத் தடை ஏதும் இல்லை. தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட […]
கூடாது. சஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை நன்கு கவனித்தால் தொழுகைக்கு உள்ளே உள்ள சஜ்தாவில் பிரார்த்தனை செய்வதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைத் தெளிவாக அறியலாம். ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 832 இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது சஜ்தா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தொழுகைக்கு உள்ளே தான் கியாம் (நிற்றல்) ருகூவு (குனிதல்) […]
ஆம். உண்டு. நபியவர்கள் வித்ரு(ஒற்றைப் படை)த் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹ்ஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல்யா அய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது ரக்அத்தில்) குல்ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள். ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று மூன்று முறை சொல்லுவார்கள். அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி) நூல்: நஸாயீ 1710, 1711, 1712, 1713, 1714, 1715, 1716, 1717, 1718, 1719, 1720, 1721, 1730, 1731, 1732, 1733, 1734 ஆகிய பதினேழு வெவ்வேறான அறிவிப்புக்களைக் கொண்டு மேற்கண்ட செய்தி […]
உளூ முறியாமலேயே உளூ முறிந்து விட்டது போன்று ஊசலாட்டம் பலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ஊசலாட்டம் ஷைத்தானால் ஏற்படுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உளூ முறிந்து விட்டது என நமக்கு உறுதியாகத் தெரிந்தால் தான் மீண்டும் நாம் உளூச் செய்ய வேண்டும். காற்றுப் பிரிந்த சப்தத்தை நாம் கேட்டால் அல்லது துர்நாற்றத்தை நுகர்ந்தால் உளூ முறிந்து விட்டது என்று முடிவு செய்யலாம். இது போன்ற சான்றுகள் ஏதும் இல்லாமல் உளூ முறிந்தது போன்ற எண்ணம் உள்ளத்தில் எழுந்தால் இந்தச் சந்தேகத்தை நாம் பொருட்படுத்தக் கூடாது. உளூவுடன் இருப்பதாகவே முடிவு செய்து கொள்ள வேண்டும். 137 حَدَّثَنَا عَلِيٌّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ […]
மலம், ஜலம், காற்று ஆகியவற்றை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது. இவற்றை வெளியேற்றி நிதானமான பின்பே தொழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 969 தொழ ஆரம்பிக்கும் போது கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை உங்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் முதலில் அவர் கழிப்பிடத்திற்குச் செல்வாராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உர்வா பின் ஜூபைர் (ரலி) நூல்: அபூதாவூத் 81
தூய்மை செய்த பின்னர் சிறுநீர் வெளிப்பட்டால் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்ய வேண்டும். ஆனால் எத்தனை முறை கழுவினாலும் சிறுநீர் கசியும் நோயுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம் ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு! அது […]
உளூச் செய்த பின் உளூ முறிந்து விட்டது போல் உணர்கிறேன். மீண்டும் உளூச் செய்ய வேண்டுமா? உளூ முறியாமலேயே உளூ முறிந்து விட்டது போன்று ஊசலாட்டம் பலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ஊசலாட்டம் ஷைத்தானால் ஏற்படுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உளூ முறிந்து விட்டது என நமக்கு உறுதியாகத் தெரிந்தால் தான் மீண்டும் நாம் உளூச் செய்ய வேண்டும். காற்றுப் பிரிந்த சப்தத்தை நாம் கேட்டால் அல்லது துர்நாற்றத்தை நுகர்ந்தால் உளூ முறிந்து விட்டது என்று முடிவு செய்யலாம். இது போன்ற சான்றுகள் ஏதும் இல்லாமல் உளூ முறிந்தது போன்ற எண்ணம் உள்ளத்தில் எழுந்தால் இந்தச் சந்தேகத்தை நாம் பொருட்படுத்தக் கூடாது. உளூவுடன் இருப்பதாகவே […]
‘ஏழ்மை’ ‘ வறுமை’ போன்ற வார்த்தைகள் இன்றைக்கு மனித சமுதாயத்தால் மிகவும் வெறுக்கப் படுகிறது. நாம் இந்த உலகத்தில் செல்வச் செழிப்போடு வாழ வேண்டும், நமக்கு எந்தச் சோதனைகளும் ஏற்படவே கூடாது என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். இன்றைக்கு உலகில் நடைபெறும் கொலை, கொள்ளை, அபகரிப்பு, போன்றவை, அதிகமான செல்வத்தை அடைய வேண்டும் என்ற ஆசையில் தான் செய்யப்படுகின்றன இலஞ்ச லாவண்யங்களை வாங்கிக் கொண்டு அதிகார வர்க்கம் நீதிக்குப் புறம்பாக நடப்பதற்குக் காரணமும் நமக்கு வறுமை வந்து விடக்கூடாது, செல்வச் செழிப்பை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான். கந்து வட்டி, மீட்டர் வட்டி என்ற பெயரில் வட்டி மூஸாக்கள் பிறர் சொத்துக்களை தனதாக்கிக் […]
கூடும். ஆமீன் கூறலாம். ? துபையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஒரு வாரமாகக் கடமையான தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவுக்குப் பின் நின்று கொண்டு துஆச் செய்கிறார்கள். இமாம் துஆச் செய்யும் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்கிறார்கள். இதை நாமும் பின்பற்றலாமா? இது பற்றிக் கேட்ட போது, பாலஸ்தீனத்தில் நடக்கும் சம்பவங்களுக்காக இவ்வாறு செய்வதாகக் கூறுகிறார்கள். விளக்கம் தரவும். குடியாத்தம் இர்ஃபான் துபை நபி (ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களை விடக் […]